வட இந்தியாவிலும் வெளியாகிறது பாலாவின் பரதேசி!
சென்னை: பாலாவின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் பரதேசி படத்தில் வட இந்தியாவில் வெளியிடும் உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பெற்றுள்ளார்.
பாலாவின் படங்களுக்கு பெரிய விசிறி இந்த அனுராக் காஷ்யப். பாலாவின் நான் கடவுளைப் பார்த்து, பிரமித்துப் பாராட்டினார். பாலாவின் படங்களை இந்தியில் ரீமேக் செய்தால், சினிமாவுக்கு வேறு பரிமாணம் கிடைக்கும் என்றவர் அனுராக்.
இவர் 'பிளேக் பிரைடே','தேவ் டி' போன்ற படங்களை இயக்கி, முன்னணி இயக்குநராகத் திகழ்பவர்.
சமீபத்தில் பரதேசி படத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு, பாலாவின் பெஸ்ட் படம் இதுதான் என்று பாராட்டியிருந்தார் அனுராக்.
இப்போது அந்தப் படத்தை தனது பான்டம் மூவீஸ் சார்பில் இந்தி மற்றும் ஆங்கில சப் டைட்டில்களோடு வட இந்தியா முழுவதும் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
"ஒரு சிறந்த படைப்பை மொழிகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் ரசித்துப் பாராட்ட வேண்டும். பாலா மாதிரி கலைஞர்களுக்கு அதுதான் சிறந்த மரியாதை," என்று கூறியுள்ளார் அனுராக் காஷ்யப்.
Comments


Click it and Unblock the Notifications
