'2.ஓ' வில்லனுக்கு ஜோடியாக பாலிவுட் பரிணிதி சோப்ரா!
மும்பை : சரகர்ஹி போரை மையமாக வைத்து பாலிவுட்டில் 'கேசரி' என்ற பெயரில் ஒரு படம் உருவாக உள்ளது. அனுராக் சிங் இப்படத்தை இயக்க அக்ஷய் குமார் முதன்மை ரோலில் நடிப்பதுடன், கரண் ஜோகருடன் இணைந்து தயாரிக்கவும் உள்ளார்.
'கேசரி' படத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக பரிணிதி சோப்ரா நடிக்க உள்ளார். பரிணிதி சோப்ரா அஜய் தேவ்கனுடன் இணைந்து நடித்த 'கோல்மால் அகெய்ன்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அக்ஷய் குமார் முக்கியமான ரோலில் நடிக்கும் '2.O' படத்தின் வேலைகள் முடிந்த நிலையில், அடுத்தாண்டு ஏப்ரலில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, 'கேசரி' படத்தை தயாரித்து நடிக்கிறார் அக்ஷய்.

'கேசரி' படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. முன்னதாக படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











