Don't Miss!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இடிந்து போன வீடு.. தினமும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பரியேறும் பெருமாள் பட நடிகர்!
சென்னை: பரியேறும் பெருமாள் பட நடிகர் பரிதாபத்துக்குரிய நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் பரியேறும் பெருமாள்.
டைகர் விருது பெற்ற கூழாங்கல்...படம் பற்றி டைரக்டர் வினோத்ராஜ் ஓப்பன் டாக்
ஆதிக்க சமுதாயத்தின் அத்துமீறல்களை தோலுரிக்கும் படமாக இந்த படம் இருந்தது.
நீலம் புரடெக்ஷன்
இந்த படத்திற்கு ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரடெக்ஷன் இப்படத்தை தயாரித்தது.
பரிதாபத்திற்குரிய நிலையில்
இந்தப் படம் பல விருதுகளையும் குவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் கதிருக்கு அப்பாவாக நடித்திருந்த நாட்டுப்புற கலைஞர் பெரும் பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டுப்புற கலைஞர்
பரியேறும் பெருமாள் படத்தில் கதிருக்கு அப்பாவாக நடித்திருந்தவர் நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ். திருநெல்வேலியில் வசித்து வருகிறார். படத்தில் பெண் வேடமிட்டு தெருக்கூத்து ஆடும் கலைஞராக நடித்திருப்பார்.
மழையில் வீடு சேதம்
இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் இவரது வீடு முற்றிலும் சேதமடைந்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தங்கராஜ் உதவி கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அவரது வீட்டை சீரமைத்து தர முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
சாப்பாட்டுக்கே கஷ்டம்
மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் லாக்டவுன் ஆகிய காரணங்களால் தங்கராஜுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் வருமானம் இன்றியும் உள்ளார். இதனால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் உள்ளார் தங்கராஜ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.