பரோட்டா சூரி பெயரில் இயங்கிய போலி ட்விட்டர் பக்கம் மூடப்பட்டது!

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமாகி பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வரும் பரோட்டா சூரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்தார்.
அதில், ரஜினி குறித்து தவறாகக் கருத்து சொன்னதாக ட்விட்டரில் எனது பெயரில் விஷமிகள் சிலர் அவதூறு கருத்துக்களை பரப்பி வருவது தெரிய வந்தது.
ட்விட்டர் பேஸ்புக்கில் பங்கேற்கும் அளவுக்கு நான் படித்தவன் இல்லை.
எனவே, எனது பெயரிலான பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை முடக்கி வைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன், என்று புகார் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சூரி பெயரில் இயங்கிய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. பேஸ்புக் கணக்குகளும் முடக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











