பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம்!
இயக்குநர் - நடிகர் பார்த்திபன் தன் அடுத்த புதிய படத்தை அறிவித்திருக்கிறார். அந்தப் படம் ஏற்கெனவே நாம் செய்தியாக வெளியிட்ட 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'.
100 ஆண்டு இந்திய சினிமாவுக்கு தான் செலுத்தும் மரியாதை என்ற அறிவிப்போடு இந்தப் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.

கூடவே, A Film without story என்றும் குறிப்பிட்டு, தன் குறும்பைக் காட்டியுள்ளார்.
இவன் படத்துக்குப் பிறகு, பார்த்திபன் இயக்கிய படங்கள் அனைத்தும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. குடைக்குள் மழை, பச்சக்குதிர, வித்தகன் ஆகிய மூன்று படங்களும் அவரது இயக்கத் திறமையை சந்தேகப்படும் அளவுக்கு ஆக்கிவிட்டன.
இப்போது மீண்டும் தன்னை நிரூபிக்க வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கியுள்ளார் பார்த்திபன்.
படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிக - நடிகர்கள் உள்ளிட்ட விவரங்களை இன்று வெளியிடுகிறார் பார்த்திபன்.


Click it and Unblock the Notifications











