மரணம் துயரமானது, கலைஞரின் மரணமோ உயரமானது: பார்த்திபன்
Recommended Video

சென்னை: மரணம் துயரமானது. கலைஞரின் மரணமோ உயரமானது என்று நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் அரசியலில் மட்டும் அல்ல திரைத்துறையிலும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரின் இடம் காலியாகவே தான் இருக்கும். அதை யாராலும் நிரப்ப முடியாது.
இந்நிலையில் கருணாநிதி பற்றி இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது

மரணம் துயரமானது. கலைஞரின்
மரணமோ உயரமானது.உயர்ந்த
நோக்கத்தை இளைஞர்களுக்கு
விட்டு செல்வது. அது....
எழுந்தால் விட்டம் தொடலாம்.
எழுத்தால் விண்ணையும் தொடலாம்.
முயன்றால் ...முடியாததை முறியடிக்கலாம்! என்றார்.
உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் பிடித்தவரின் மரணம் தாங்க முடியாத துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் மறைவு செய்தி மனதில் தாங்க முடியாத பாரத்தை இறக்கி வைத்துவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











