twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மத்திய மாநில அரசுகள் கூட செய்யாததை விவசாயிகளுக்குச் செய்த மாமழை! - பார்த்திபன்

    By Shankar
    |

    சென்னை: மத்திய மாநில அரசுகள் கூடச் செய்யாததை விவசாயிகளுக்கு இந்த மழை செய்து வருகிறது என்றார் இயக்குநர் ரா பார்த்திபன்.

    6 அத்தியாயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேசுகையில், "மழை வணக்கம். மத்திய அரசு செய்ய வேண்டியதையும் சேர்த்து விவசாயிகளுக்குச் செய்யும் மா மழைக்கு என் நன்றிகள்.

    Parthiban hails Rain

    2.ஓ ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். அங்கு நான் போகாமல் இங்கே வந்திருக்கிறேன். இங்கு நான் தேவை. அங்கு நான் தேவை இல்லை.

    6 பேர் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய வேலை இல்லை. இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? இந்த கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    விஷயம் உள்ளவர்களை பார்த்தால்தான் சின்ன மிரட்சி ஏற்படும். அப்படி அஜயன்பாலாவை பார்த்து மிரட்சி அடைந்திருக்கிறேன். தி நகரில் ஒரிஜினல் நெய்யினால் செய்யப்பட்ட போளியை விற்பார்கள். போளியை விற்கவே ஒரிஜினாலிட்டி தேவைப்படுகிறது. போலிகள் நிறைந்திருக்கும் சினிமாவிலும் ஒரிஜினாலிட்டி தேவை. 6 அத்தியாயங்கள் அப்படி ஒரு படமாக அமையும்," என்றார்

    English summary
    Director Ra Parthiban has thanked rain for its great help to farmers
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X