மதம் கொண்ட யானைகள் பல மிதித்தாலும் தமிழ் சாகாது! பாரதியார் நினைவு தினம்.. பார்த்திபன் பதிவு!
சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் பார்த்திபன் போட்டுள்ள ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் வைத்திருந்த ஆங்கிலேயர்களை, தனது பேனா முனை மூலம் எதிர்த்து துரத்தி அடித்தவர் மகாகவி பாரதியார்.
ஏகப்பட்ட சுதந்திர தாகத்தை வளர்க்கும் பாடல்களை எழுதியுள்ள பாரதியார், தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் தனித்துவத்தையும் வெகுவாக புகழ்ந்து தள்ளி உள்ளார்.

இந்தி திணிப்பு சர்ச்சைகள் சமீப காலமாக பெருகி வரும் நிலையில், இந்தி தெரியாது போடா டி சர்ட்களும் இங்கே டிரெண்ட் செய்யப்பட்டது.
யுவன் சங்கர் ராஜா, சிரிஷ், சாந்தனு, கிக்கி விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், வெற்றிமாறன் உள்ளிட்டோர், ஐ எம் தமிழ் ஸ்பீக்கிங் இந்தியன் மற்றும் இந்தி தெரியாது போடா டி சர்ட்களை அணிந்து தங்களது இந்தி எதிர்ப்பை காட்டி இருந்தனர்.
இந்நிலையில், தற்போது நடிகர் பார்த்திபன், "மதம் கொண்ட யானைகள் பல மிதித்தாலும் தமிழ் சாகாது!" என தமிழின் சிறப்பை உயர்த்தி பாரதியார் எழுதிய கவிதையை சுட்டிக் காட்டி பாரதியாரின் நினைவு நாளை நினைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











