Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மகள் சார்பாக பார்த்திபன் வெளியிட்ட முக்கிய பதிவு...குவியும் கமெண்ட்கள்
சென்னை : தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள், புதுவிதமான முயற்சிகள் செய்வதில் புகழ்பெற்றவர் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன். இவரின் மற்றொரு புதிய முயற்சியாக ஒருவர் மட்டுமே நடித்த படமான ஒத்த செருப்பு படம், தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
நான் தடுப்பூசி போட்டுட்டேன்.. ப்ளீஸ் நீங்களும் போட்டுக்குங்க.. 'சூப்பர் ஸ்டார்' வேண்டுகோள்!
தற்போது தனது அடுத்த படமான இரவின் நிழல் படத்தின் வேலைகளில் பார்த்திபன் ஈடுபட்டுள்ளார். சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல காலமாக முயற்சித்தும் முடியாமல் போய், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
ஓட்டு போட முடியாமல் போனது
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன், தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் முகத்தில் வீக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக பார்த்திபன் சமூக வலைதளத்தில் கூறி இருந்தார். இதனால் தான் தன்னால் ஓட்டளிக்க முடியாமல் போனதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
என் அன்பு மகள் கீர்த்தனா
— Radhakrishnan Parthiban (rparthiepan) April 25, 2021
இத்த’கவலை’ பதிவுச் செய்யச் சொன்னார்.
எனவே இது நூறு சதவிகித உண்மை!
ஒவ்வாமை (allergy)சில சமயங்களில் உணவு,ஒப்பனை,அதிக ஒளி இப்படி பல காரணங்களால் வந்ததுண்டு.பணவீக்கத்தை விட முகவீக்கம் குறைவாகவே ஏற்படும்.இம்முறை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது.conti
தடுப்பூசியால் ஒவ்வாமை
தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன், தான் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போட்டுக் கொண்டதாக கூறி இருந்தார். அத்துடன், தற்போது தனக்கு காய்ச்சல், உடம்பு வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்பட்டிருப்பதாக கூறினார்.
Conti....
— Radhakrishnan Parthiban (rparthiepan) April 25, 2021
இம்முரை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது.ஒரே நாளில் சரியாகியும் விட்டது.எனவே தடுப்பூசி அவசியமானது.but ஜூரம்,உடல் வலி போன்ற ஒரு reaction வந்து போகலாம்.என் உடல் நலன் மீது அக்கரை கொண்ட அனைவருக்கும் நன்றி!
என் மகள் சொன்ன தகவல்
இதைத் தொடர்ந்து, தன் மகள் கீர்த்தனா கூறியதாக குறிப்பிட்டு கொரோனா தடுப்பூசி பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், என் அன்பு மகள் கீர்த்தனா இத்த'தகவலை' பதிவுச் செய்யச் சொன்னார்.
எனவே இது நூறு சதவிகித உண்மை! ஒவ்வாமை (allergy)சில சமயங்களில் உணவு,ஒப்பனை,அதிக ஒளி இப்படி பல காரணங்களால் வந்ததுண்டு.பணவீக்கத்தை விட முகவீக்கம் குறைவாகவே ஏற்படும்.இம்முறை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது.
தடுப்பூசி அவசியம்
இம்முறை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது.ஒரே நாளில் சரியாகியும் விட்டது.எனவே தடுப்பூசி அவசியமானது.but ஜூரம்,உடல் வலி போன்ற ஒரு reaction வந்து போகலாம்.என் உடல் நலன் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி!. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்.
விருது வென்ற கீர்த்தனா
பார்த்திபனின் மகள் கீர்த்தனா குழந்தை நட்சத்திரமாக, மணிரத்னத்தின் உதவியாளர் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதினை கீர்த்தனா பெற்றார். இந்தியாவின் டாப் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்யை 2 ஆண்டுகளுக்கு முன் கீர்த்தனா திருமணம் செய்து கொண்டார்.