Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
திரையுலகில் எனது 'கோடிட்ட இடங்களை' நிரப்பியர் குரு பாக்யராஜ்! - பார்த்திபன்
திரையுலகில் எனது கோடிட்ட இடங்களை நிரப்பியவர் குரு பாக்யராஜ்தான் என்று கூறினார் இயக்குநர் பார்த்திபன்.
தனது படத்தின் தலைப்புகளை மிக வித்தியாசமாக வைப்பதில் ஏகத்துக்கும் மெனக்கெடுபவர் பார்த்திபன். 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்துக்குப் பிறகு அவர் இப்போது இயக்கி வரும் படத்துக்கு கோடிட்ட இடங்களை நிரப்புக என்று தலைப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தை ரீல் எஸ்டேட் கம்பெனி எல் எல் பி' மற்றும் 'பையாஸ்க்கோப் பிலிம் பிரேமர்ஸ்' இணைந்து தயாரிக்கின்றன.
சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா, சிங்கம்புலி நடிக்கும் இந்தப் படத்துக்கு சத்யா இசையமைக்க, அர்ஜுன் ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு பிரபு தேவா நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் குறித்து பார்த்திபன் பேசுகையில், "பிழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதுதான் எங்களின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக...' அந்தப் பிழை ஒரு காதலாக இருக்கலாம், அல்லது வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது அதற்கும் மேலான ஒன்றாகவும் இருக்கலாம். அது என்ன என்பதை ரசிகர்கள் தான் இந்த கோடிட்ட இடங்களில் நிரப்ப வேண்டும்...
நான் திரையுலகில் காலடி எடுத்து வைத்த போது என்னுடைய வாழ்க்கை கோடிட்ட இடங்களாகத்தான் இருந்தது.... அந்த காலியான இடங்களை நிரப்பியவர் என்னுடைய குருநாதர் பாக்கியராஜ் சார்.... அவருக்குச் சமர்ப்பிக்கும் வகையில் நான் உருவாக்கிய திரைப்படம்தான் இந்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக'.
மேலும் இந்த திரைப்படத்தில் அவருடைய மகன் சாந்தனு கதாநாயகனாக நடித்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அவருடைய திரையுலக வாழ்க்கையில் விடுபட்டிருக்கும் இடங்களை நிரப்பும் திரைப்படமாக எங்களின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' இருக்கும்," என்றார் நம்பிக்கையுடன்.