Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
முதல்வராய் இன்று.. முதல் வாழ்த்தாய் அன்றே.. தேசிய விருது விழாவை ஞாபகப்படுத்துறாரோ பார்த்திபன்?
சென்னை: ஒத்த செருப்பு படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் பார்த்திபனை கடந்த மார்ச் மாதமே மு.க. ஸ்டாலின் வாழ்த்தி இருந்தார்.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அப்போதே முதல் ஆளாய் வாழ்த்தியமைக்கு நன்றி என தற்போது திடீரென நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்... கொரோனா பாதிப்புக்கு ரூ.1 கோடி நிதியளித்த பாலிவுட் நடிகர்
மே மாதம் தேசிய விருதுகள் வழங்கப்படும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதனை நினைவுப்படுத்துகிறாரா? என்கிற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
தேசிய விருது
2019ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமாவில் அசுரன், சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களும் அதில் நடித்த நடிகர்களும் தேசிய விருதுக்கு தேர்வாகினர். சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கும் சிறப்பு விருது விஜய் சேதுபதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தில் சிறப்பாக இசையைமைத்த இமானுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
மு.க. ஸ்டாலின் வாழ்த்து
கடந்த மாதம் மார்ச் 23ம் தேதி மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய விருது பெறும் தனுஷ், விஜய்சேதுபதி, பார்த்திபன் மற்றும் இமான் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அசுரன் வெற்றிமாறனுக்கு அன்புநிறை வாழ்த்துகள்! அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்!" என ட்வீட் போட்டு வாழ்த்தி இருந்தார்.
பார்த்திபன் நன்றி
அந்த ட்வீட்டை டேக் செய்து தற்போது நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வராய் இன்று.. முதல் வாழ்த்தாய் அன்றே.. நன்றி!" என பதிவிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தனது நன்றியை தற்போது தெரிவித்துள்ளார்.
ஞாபகப்படுத்துறாரோ
தேசிய விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், மே மாதம் அதன் விருது விழா நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த முடியாத சூழலில் தமிழக கலைஞர்களின் தேசிய விருது குறித்து முதல்வருக்கு பார்த்திபன் ஞாபகப்படுத்துகிறாரோ என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்து வருகின்றன.