Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அரசியல் (கள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல்… கமலுக்கு வித்தியாசமாக ஆறுதல் கூறிய பார்த்திபன் !
சென்னை : நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் கடும் போராட்டத்திற்கு பிறகு தோல்வி அடைந்தார்
இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆயிரம் வாக்குகளுக்கு மேல் என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மனைவியுடன் அஜித்...டிரெண்டிங் ஆகும் க்யூட்டான அரிய ஃபோட்டோ
கமலுக்கு பலரும் ஆறுதல் கூறிவரும் நிலையில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆறுதல் கூறியுள்ளார்.
கடும் போட்டி
கோவை தெற்குத் தொகுதியில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மாநில நிர்வாகி மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டார் . இவர்களுக்கு மத்தியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் களமிறங்கினார். பா.ஜ.க தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசனும் போட்டியிட்டார் .
மாறி மாறி முடிவுகள்
தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்தே இம்மூவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதே நிலைதான் வாக்கு எண்ணிக்கையின் போதும் நிலவியது. நேற்று நடத்த வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே கமல் முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால் திடீரென பின்னடைவை சந்தித்தார். மீண்டும் முன்னிலை பின்னடைவு என மாறி மாறி முடிவுகள் வந்து கொண்டு இருந்தன.
வெற்றி பெற்றார்
22 வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது, கமலையும், மயூரா ஜெயக்குமாரையும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு வானதி முன்னேறினார். 25,26 என கடைசி சுற்றில் ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் வானதி சீனிவாசன் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடும் போராட்டத்திற்கிடையே மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தோல்வி அடைந்தார்.
வாழ்த்திய பார்த்திபன்
காலையில் கமல் முன்னிலையில் இருந்த போது முதல் ஆளாக " kaMaL A'' என எம்.எல்.ஏ கமல் என்பதை குறிக்கும் வகையில் பதிவிட்டு வாழ்த்தி இருந்தார். ஆனால்,நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு கமல்ஹாசன் தோல்வியைத் தழுவினார்.
பேராண்மையுடன் நின்றதே
இதையடுத்து கமலுக்கு ஆறுதல் கூறும் வகையில் பார்த்திபன் மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், வெற்றி தோல்வி எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் (கள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல், வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே எனக் கூறியுள்ளார்.