Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பருத்தி வீரன்-தொடரும் வழக்கு
பருத்தி வீரன் படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட மொழி உரிமை விற்கப்பட்டு விட்டதா என்பதைத் தெரிவிக்குமாறு படத் தயாரிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் அமீரின் சீரிய இயக்கத்தில் உருவான படம் பருத்தி வீரன். இப்படத்தை ஞானவேல்ராஜா என்பவர் தயாரித்தார். இவர் நடிகர் சூர்யாவின் உறவினர் என்று கூறப்படுகிறது. சூர்யாவின் தம்பியான கார்த்திதான் பருத்தி வீரன் படத்தின் நாயகன். பிரியா மணி நாயகியாக நடித்திருந்தார்.
இப்படத்தின் தயாரிப்பின்போது ஞானவேல்ராஜாவுக்கும், அமீருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக திரையுலக அளவில் பஞ்சாயத்து பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பருத்தி வீரன் படத்தின் கன்னட, தெலுங்கு மொழி உரிமையை விற்கக் கூடாது என்று ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் அமீர்.
அந்த வழக்கு விசாரணையின்போது ரூ. 50 லட்சம் உத்தரவாதத் தொகையை டெபாசிட் செய்வதாக ஞானவேல்ராஜா தெரிவித்தார். இதுதவிர இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்படுவுதாகவும், பட உரிமையை விற்பதற்கு தடை விதிக்கக் கூடாது என்றும் கோரினார். இதை ஏற்ற நீதிபதி சந்துரு, அமீர் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து டிவிஷன் பெஞ்ச் முன்பு அமீர் அப்பீல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், அக்பர் அலி ஆகியோர், பருத்தி வீரன் படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட உரிமை விற்கப்பட்டு விட்டதா என்பதை தெரிவிக்குமாறு ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.