சிபிஐ அதிகாரியாக களம் இறங்கும் பருத்திவீரன் முத்தழகு " முத்தழகின் புதிய அவதாரம்"
சென்னை : பருத்திவீரன் என்ற படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்தவர் நடிகை ப்ரியாமணி. இந்த படத்தில் தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றார். தமிழைத் தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.
நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்துபவர் நடிகை ப்ரியாமணி. பல தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

தமிழில் கடைசியாக நடித்தது சாருலதா என்ற திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் Dr 56. இந்த படத்தில் பிரியாமணி ஒரு சிபிஐ ஆபீசராக நடிக்கவிருக்கிறார் .
அவருடைய திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் படம். இந்த படத்தில் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் கதை திரைக்கதை எழுதிய பிரவீன் ரெட்டி. டி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரியா மணி நடிக்கும் இந்தப் படம் மக்களிடையே எவ்வித வரவேற்பை பெறும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ப்ரியா மணி யதார்த்தமான தைரியமான கதாபாத்திரத்தில் நடிக பொருத்தமானவர். இப்படத்தில் அவர் சிபிஐ அதிகாரியாக நடிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். நிச்சயம் அவருக்கு இப்படம் ஒரு நல்ல ரீ என்ட்ரி படமாக அமையும்.


Click it and Unblock the Notifications











