“தமிழ் சினிமாவில் அஜித் தான் என் முதல் காதலர்”.. ஓப்பனாக போட்டுடைத்த பிரபல நடிகை!
தமிழ் சினிமாவில் அஜித் தான் எனது முதல் காதலர் எனக் கூறுகிறார் நடிகை பார்வதி நாயர்.
Recommended Video

சென்னை: தமிழ் சினிமாவில் அஜித் தான் எனது முதல் காதலர் எனத் தெரிவித்துள்ளார் நடிகை பார்வதி நாயர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் பார்வதி நாயர். கேரளாவைச் சேர்ந்த அவர், அப்படத்தைத் தொடர்ந்து கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இந்நிலையில், பேட்டியொன்றில், "அதில், எனது பள்ளி பருவத்தில் நிறைய பேருடன் காதல் உணர்வு ஏற்பட்டது. ஆனால் முதல் காதல் என்றால் அது அஜித் சாருடன் தான். ஆனால் தற்போது அவருடனே ஒரு படத்தில் நடித்துவிட்டேன்" என மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி, தமிழுக்கு வரும் பெரும்பான்மையான நாயகிகளின் கனவு என்றால் அது அஜித்துடன் ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான். அந்தளவிற்கு தமிழ் சினிமாவை தாண்டியும் பல நடிகைகளுக்கு அஜித் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. தற்போது அது பார்வதி நாயரின் பேட்டி மூலம் மேலும் உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











