Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
"ரோசனை மஞ்சுவாண்டு"தான் செந்தில்குமாரி என்ன பண்ணிட்டிருக்காங்க தெரியுமா?
சென்னை : 'பசங்க' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் செந்தில்குமாரி. அந்தப் படத்திற்குப் பிறகு 'பசங்க செந்தி' என்றே அழைக்கப்பட்டார்.
தனது கீச்சுக் குரல் யதார்த்த நடிப்பால் தொடர்ந்து அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார். தற்போது 'மெர்சல்', 'மதுர வீரன்', 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.
இந்நிலையில், சின்னத்திரை தொலைக்காட்சித் தொடரில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் செந்தி. விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் செல்லமான அம்மா மற்றும் மாமியாராக நடித்து வருகிறார்.
சினிமாவிலும் பிசிதான்
டி.வி சீரியலில் நடிப்பது பற்றி, "இப்போதும் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சரவணன் மீனாட்சி தொடர் எனக்கு மிகவும் பிடிக்கும்.
வற்புறுத்திக் கொண்டே இருந்தார்
அதன் இயக்குனருக்கு போன் செய்து ஒரு நாள் பாராட்டினேன். அதிலிருந்து அவரும் நீங்களும் நடிங்களேன் என்ற வற்புறுத்திக் கொண்டே இருந்தார், மறுத்து வந்தேன்.
பார்ப்போமே
தொடர் வற்புறுத்தலால் நடித்துத்தான் பார்ப்போமே என்று நடிக்க ஆரம்பித்து விட்டேன். சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை.
சினிமாதான் முக்கியம்
ஆனால் எனக்கு சினிமாதான் முக்கியம். சரவணன் மீனாட்சிக்குப் பிறகு தொடர்ந்து சீரியலில் நடிக்கும் ஐடியா எதுவும் இப்போதைக்கு இல்லை" என்கிறார் செந்தி.