Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தனுஷ் 'யார் மகன்' என்ற வழக்கை நினைத்து கவலை இல்லை, ஏன் என்றால்...: கஸ்தூரி ராஜா
சென்னை: தனுஷ் என் மகன் தான் என்பது எங்களுக்கு நன்கு தெரியும் என்பதால் திருப்புவனம் தம்பதி தொடர்ந்துள்ள வழக்கை நினைத்து கவலை இல்லை என இயக்குனர் கஸ்தூரிராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தனுஷ் நேரில் ஆஜரானார். அப்போது அவரின் அங்க அடையாளங்கள் சரி பார்க்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தனுஷ்
தனுஷ் எங்கள் மகன் என்று அந்த தம்பதி தொடர்ந்துள்ள வழக்கில் உ ண்மை இல்லை. அதனால் அந்த வழக்கை நினைத்து எங்களுக்கு கவலை இல்லை என தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.
சட்டம்
தனுஷ் எங்கள் மகன் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். அதனால் அந்த வழக்கை நினைத்து டென்ஷன் ஆகாமல் சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம் என்கிறார் கஸ்தூரி ராஜா.
சினிமா
நான் 1991ம் ஆண்டு சினிமா பயணத்தை துவங்கினேன். அதில் இருந்து என் குடும்பத்தார் பற்றி அனைவருக்கும் தெரியும். அதனால் தனுஷ் என் மகன் என நீதிமன்றத்தை தவிர யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.
ஆவணங்கள்
நாங்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள். அந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்துவிட்டோம் என்ற கஸ்தூரி ராஜா தனுஷ் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவாரா என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.