Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தீபாவளி களைக்கட்டிய பிக்பாஸ் வீடு.. பாட்டியான அர்ச்சனா.. புது டாஸ்க்க பாத்தீங்களா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புதிய புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதுமே தீபாவளி பண்டிகை செலிபிரேட் செய்யப்படவுள்ளது.
இதன் முதற்கட்டமாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷன் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள்.
பாட்டி சொல்லை தட்டாதே
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அர்ச்சனாதான் இந்த டாஸ்க்கில் பாட்டியாக உள்ளார்.
சொத்தை பிரித்து விடுகிறேன்
ஒவ்வொரு பண்டிகைக்கும் பிள்ளைகள் வருவாங்கன்னு காத்துட்டு இருந்த பெரியவங்களுக்கு எப்போவுமே ஏமாற்றம்தான் கிடைச்சுது. இதனால் சொத்தை பிரித்து விடுகிறேன். சொத்து வேண்டுமென்றால் எல்லோரும் என்னை வந்து பாருங்கள் என்று கூறுகிறார் பாட்டி.
சந்தோஷப்படுத்துங்கள்..
மேலும் சொத்து பத்திரங்கள் அனைத்தையும் ஒரு பெட்டியில் போட்டு பூட்டி வைக்கிறார். அதோடு தன்னை யார் சந்தோஷமாக பார்த்துக் கொள்கிறார்களோ அவர்களுக்குதான் என் சொத்து பத்திரங்கள் என்கிறார் பாட்டி.
எல்லாம் சொத்துக்காகதான்
இதனை தொடர்ந்து மொத்த ஹவுஸ்மெட்டும் பாட்டியை சந்தோஷப்படுத்த பார்க்கின்றனர். இதனால் பிக்பாஸ் வீட்டில் மகிழ்ச்சி பொங்குகிறது. ஆனால் எல்லாமே சொத்துக்காகதான் என தெரிகிறது.
யாருக்கு சொத்து பத்திரம்?
இதற்கிடையே ஒருவர் பாட்டியின் சொத்து பத்திரம் உள்ள பெட்டியை களவாட பார்க்கிறார். இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ. இதனை தொடர்ந்து யாருக்கு பாட்டியின் சொத்துக்கள் கிடைக்கப் போகிறது என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவந்துள்ளது.