Don't Miss!
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னை ஏன் ஆட்டத்துல சேர்த்துக்கல.. ராஜுவுடன் சண்டைக்கு போன பாவனி.. சப்போர்ட்டுக்கு வந்த அக்ஷரா!
சென்னை: ரெட் டிவி அணியை போல ப்ளூ டிவி அணி சிறப்பாக இந்த பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு பாவனிக்கு அதிகமாகவே உள்ளது.
தன்னுடைய யோசனைகளை கேட்டு ராஜு நடக்கவில்லை என்கிற ஆதங்கத்தால் அவருடன் நேருக்கு நேர் கேள்வி எழுப்பினார்.
ராஜுவுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக அக்ஷரா பாவனியிடம் பேச அவருடன் பேசாமல் ராஜுவிடமே கேள்விகளை தொடுக்க ஆரம்பித்து விட்டார்.
பாவனிக்கும் ராஜுவுக்கும் ஆகாது
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பாவனிக்கும் ராஜுவுக்கும் ஆகாது. நிரூப், பிரியங்கா நட்பு என சில விஷயங்களை சுற்றியே இந்த சீசன் பெரிதளவில் நகர்வது ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரு பிரச்சனையை முடித்து விட்டு புதிய பிரச்சனைகளை ஆரம்பிக்காமல் ஒரே பிரச்சனையை வைத்துக் கொண்டு ஷோவை நடத்த முயன்றால் ரொம்பவே போர் அடிக்கும் என்பது தான் மக்களின் கருத்து.
சண்டையும் சுவாரஸ்யமும்
வெறும் சண்டை மட்டுமே பொட்டுக் கொண்டிருந்தாலும் சும்மா ஜாலியா மட்டுமே பேசிக் கொண்டிருந்தாலும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு இந்த ஷோ பிடிக்காமல் போய்விடும். சண்டையும் இருக்கணும் சுவாரஸ்யமும் இருக்கணும், நட்பு, காதல், கோபம், காமெடி என எல்லாமே கலந்து இருக்கணும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து தான் இந்த நிகழ்ச்சியை கண்டு வருகின்றனர். ஆனால், அதை கொடுக்க இந்த சீசன் ரொம்பவே திணறுகிறது என்பது தான் தெளிவாக தெரிகிறது என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
பாவனியை விடாத ராஜு
எந்த டாப்பிக் எடுத்தாலும், பாவனியை விடாமல் ராஜு தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பதும், ராஜுவை டார்கெட் செய்து பாவனி பேசுவதும் ரசிகர்களுக்கு செம கடுப்பை கொடுத்து வருகிறது. இருவருமே தங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை பேசி தீர்த்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தால் தான் இந்த ஷோ நல்லா இருக்கும் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன. அதற்கு பதிலாக இருவரும் ஒருவரையொருவர் வார வாரம் நாமினேட் செய்வதும் இருவரையும் மக்கள் காப்பாற்றுவதும் தேவையற்ற வேலை.
என்னை ஆட்டத்துக்கு சேர்த்துக்கல
ப்ளூ டிவி அணியில் அத்தனை பேர் இருந்தாலும் ராஜு மட்டுமே ஒன் மேன் ஷோவாக அந்த நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார் என்கிற குற்றச்சாட்டை ஆடியன்ஸ் ஆன சஞ்சீவே முன் வைத்தார். தொடர்ந்து பாவனி பல முறை தனது இன்புட்டை கொடுக்க முயற்சி செய்தும் அதனை இமான் அண்ணாச்சி மற்றும் ராஜு திட்டமிட்டே மறுத்து வருவதாக குற்றம்சாட்டினார் பாவனி.
இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை
பிக் பாஸ் வீட்டு வானிலை அறிக்கை எல்லாம் சொல்வது பற்றி தன்னிடம் ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை என பாவனி ராஜுவுடன் சண்டை போட்டதும் இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்டு உங்களை அவாய்டு பண்ணல.. அந்த நேரத்தில் தோன்றியதை செய்தேன் மன்னிச்சுடுங்க என ஸாரியும் கேட்டு விட்டார்.
அக்ஷரா ஆதரவு
பாவனி ராஜுவிடம் கேள்விகளை அடுக்க என்கிட்ட கூடத்தான் எந்தவொரு டிஸ்கசனும் பண்ணல.. நான் ஏதாவது கேட்டேனா? என அக்ஷரா பாவனியை சமதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு ராஜுவுக்கு சப்போர்ட் செய்தார். ஆனால், பாவனி அக்ஷராவிடம் பேச விரும்பாமல் ராஜுவையே மீண்டும் வம்பிழுத்தது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.