Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிபியை ஹக் பண்ண பாவனி.. அபிநய் பக்கமே போகலையே.. அந்த கேள்விக்கு அப்படியே மழுப்பிட்டாரே?
சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் எவிக்ட் ஆன போட்டியாளர்கள் வருகை தந்துள்ளனர்.
சுருதி மற்றும் நாடியா சங் சீருடன் வந்து மாலை அணிவித்து ஃபைனலிஸ்ட்டுகளை சந்தோஷப்படுத்திய நிலையில், அவர்களை தொடர்ந்து சிபி மற்றும் அபிநய் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.
சிபி மற்றும் அபிநயை மற்ற போட்டியாளர்கள் வரவேற்ற நிலையில், பாவனி அபிநய் பக்கமே போகாதது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
சுருதி இருந்திருக்கலாம்
பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள சுருதியை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் பூரித்து போயுள்ளனர். பாவனிக்கு பதிலாக சுருதி இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் பல பிரச்சனைகள் கிளம்பியே இருக்காது என்றும் சிறப்பாக விளையாடி இருப்பார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
மற்றும் அபிநய்
சுருதி, நாடியா சங், சிபி என முன்னாள் போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில், சிபியுடன் மற்றும் அபிநய்யும் வீட்டிற்குள் செம ஹேண்ட்ஸமாக உள்ளே நுழைந்தார். பிக் பாஸ் ரேடியோ ஸ்டேஷன் செட்டில் இருவரும் அமர்ந்து கொண்டு பேச பிரியங்கா ஜவ்வு கிழிய அவர் ஸ்டைலில் கத்திக் கொண்டே ஓடி வந்து சிபிலாவை கட்டி அணைத்தார்.
சிபியை கட்டிப்பிடித்த பாவனி
சிபி மற்றும் அபிநயை பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் போட்டியாளர்கள் வரவேற்றனர். ராஜு அபிநய்க்கு கை கொடுத்து வரவேற்றார். சிபியை கட்டியணைத்து பாவனி வரவேற்றார். பிரியங்கா, அமீர், நிரூப், ராஜு என 4 போட்டியாளர்களும் இருவரையும் அன்போடு வரவேற்றனர்.
அபிநயை கண்டுக்காத பாவனி
அபிநய் தான் தனது எல்லா பிரச்சனைக்கும் காரணம் என நினைத்த பாவனி இன்னமும் அவர் மீது உள்ள கோபத்தை போக்கிக் கொள்ளாமல் இருக்கிறார் என்பது அபிநயை நாசுக்காக அவர் அவாய்ட் பண்ணியதில் இருந்தே தெரிவதாக நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
அபிநய் திருந்திட்டாரு
அதே போல பாவனி பக்கமே அபிநய் போகாமல் இருந்தது நல்ல விஷயம் என்றும் இதை முன்பே கடைபிடித்து இருந்தால் இந்த அளவுக்கு பெயர் கெட்டுப் போய் இருக்காது என்றும் அபிநய்க்கு நெட்டிசன்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர். அப்படி இருந்தும் பாவனியையும் அமீரையும் சேர்த்து வைத்து பேசும் இடங்களில் எல்லாம் அபிநய் லேசாக அந்நியனாக மாறினார் என்றும் நெட்டிசன்கள் நோட் பண்ணி ட்ரோல் செய்து வருகின்றனர்.
மழுப்பிய பாவனி
சிபி கேள்விகளை ஆரம்பிக்கும் போதே யாரும் மழுப்பாமல் மனதுக்கு பட்டதை பளிச்சென பதில் சொல்ல வேண்டும் என்றே சொல்லி இருந்தார். பாவனியிடம் சிபி இந்த வீட்டை விட்டு எந்த போட்டியாளர் போகும் போது ரொம்ப சந்தோஷப்பட்டீங்க என்கிற் கேள்வியை கேட்டதும் பளிச்சென பதில் சொல்லாமல் யாருமே இல்லை என பாவனி சொன்னது மழுப்பல் பதில் என்றும் உண்மையிலேயே அபிநய் போனதும் பாவனி ரொம்பவே ஹேப்பி ஆகிட்டார் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
சமாதானம் ஆவார்களா
பிக் பாஸ் வீட்டில் இருந்து அபிநய் வெளியேறுவதற்குள் பாவனி மற்றும் அபிநய் ஒருவருடன் ஒருவர் பேசி புரிந்துக் கொண்டு நமக்குள் எந்த பிரச்சனையும் இல்லை ஏதாவது தவறாக நடந்திருந்தால் சாரி என சொல்லி சமாதானம் ஆவார்களா? என்பதை காணவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.