முந்தானை சேலை காற்றில் பறக்க.. இடுப்பை அப்படி இப்படி.. கலக்கும் பாவனி
சென்னை : ஜன்னல் வைத்த ஜாக்கெட் போட்டு முழு முதுகையும் முழுசாக காட்டி ,அன்ன நடை நடந்து பார்ப்பவர்களை கிறங்கடித்திருக்கிறார் பாவனி ரெட்டி.
மாடர்ன் உடை போட்டு போரடித்து விட்டதா. அதான் காற்று வாங்க இப்படி சேலையில் கிளம்பிட்டீங்களா என ரசிகர்கள் கொஞ்சும் ரசிகர்கள் இவர் சினுங்கலைப் பார்த்து பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
மீண்டும் எப்போது சீரியலுக்கு வருவீர்கள் என கமெண்ட்களில் நச்சரித்து வருகின்றனர்.

சின்னத்தம்பி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டாப்பில் வலம் வந்த சின்னத்தம்பி சீரியல் கதாநாயகி தான் பாவனி ரெட்டி . இவர் இரட்டைவால் குருவி, பாசமலர், இ.எம்.ஐ தவணை முறை வாழ்க்கை என பல சீரியல்களில் நடித்து இருக்கிறார் .ஆனாலும் சின்னத்தம்பி சீரியலில் நந்தினி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார். இப்ப வரைக்கும் இவரை பாவனி என்ற பெயரை மறந்து பலரும் நந்தினி என்று அழைத்து வருகின்றனர்.

சூப்பராக வாழ்ந்தார்
இவர் சின்னத்தம்பி சீரியலில் நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து விட்டார். என்றுதான் சொல்லவேண்டும் அதனால்தான் தற்போது இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை என்றாலும் இவருடைய ரசிகர்கள் எப்போது சீரியலுக்கு மீண்டும் வருவீர்கள் என ஆவலுடன் கேட்டு வருகின்றனர் . அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து விட்டார் .இவரும் தனக்கு ஏற்ற கதை கிடைத்தால் மீண்டும் சீரியலுக்கு வந்து விடுவேன் என கூறியிருக்கிறார்.

மாடல் அழகி
சீரியலுக்கு வருவதற்கு முன்பே இவர் மாடலாக தான் கலக்கியிருக்கிறார் .கல்லூரிப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும்போது இவர் மாடலிங்கில் காலடி எடுத்து வைத்து அதன் மூலமாகத்தான் இவருக்கு தெலுங்கிலும் தமிழிலும் சீரியல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .சீரியலில் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார் .தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் தெலுங்கிலும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடித்தபோதே காதல்
இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தெலுங்கு நடிகர் பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார் .அதற்குப் பிறகு வாழ்க்கையில் விரக்தி இருந்தாலும் தன்னுடைய கவலையைப் போக்குவதற்காக மீண்டும் சீரியல்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தார் .தற்போது சீரியல்கள் வாய்ப்பு இல்லாவிட்டாலும் மாடலிங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இன்ஸ்டாவில் ஆக்டிவ்
அடிக்கடி இவர் சீரியலை தாண்டி இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் ஆக்டிவாக இருந்துவருகிறார். சமூக வலைத்தளத்தில் இவர் ஆக்டிவாக இருப்பதால் சீரியலை தாண்டி சமூக வலைத்தளத்திலும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் சில போட்டோ ஷூட் போட்டோக்களை போஸ்ட் பண்ணி இருக்கிறார் .அதை பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் இவரை கொஞ்சி வருகின்றனர். சீரியலில் படு பவ்வியமாக ஹோம்லியாக இருக்கும் இவர் இதுவரைக்கும் இன்ஸ்டாகிராமில் மாடலாக மாடலிங் போட்டோக்களை அப்லோட் செய்து வந்தார்.

எக்ஸஸ் அழகு
முதலில் இவரை இன்ஸ்டாகிராமில் இவ்வளவு மாடலாக பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆனாலும் இந்த எக்ஸஸ் அழகும் நல்லாதானே இருக்கு என்று ரசிக்க ஆரம்பித்து விட்டனர். ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் ட்ரெடிஷனல் ஆக புடவையில் சில போட்டோக்களை போஸ்ட் போட்டிருக்கிறார் .இதை பார்த்ததும் அசந்து போன அவருடைய ரசிகர்கள் இவர் போஸ்ட் போட்டு சிறிது நேரத்திலேயே கமெண்ட் களால் கதிகலங்க வைத்துவிட்டனர்.

செம கவர்ச்சி
அதுவும் பின்னழகை காட்டி, இடுப்பு மடிப்பு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆட்டம் போடும் வகையில் அன்ன நடை நடந்து வயல் வரப்பில் ஃபேஷன் ஷோ காட்டியிருக்கிறார் .இவருடைய பின்னழகை ரசிக்கவா அல்லது முதுகைப் பார்க்கவா அல்லது அந்த பேஷன் பிளவுஸைப் பார்க்கவா அல்லது அவருக்கு முன்பு இருக்கும் இயற்கையை ரசிக்கவா என ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











