Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாவனி உங்களுக்கு மனைவியா? தோழியா? பிரிந்துபோன முன்னாள் காதலரின் நெகிழ வைக்கும் பதில்!
சென்னை: பாவனி ரெட்டி மனைவியா காதலியா என்ற ரசிகரின் கேள்விக்கு அவரது இரண்டாவது காதலர் நெகிழ வைக்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் பாவனி ரெட்டி. சீரியல் நடிகையான பாவனி ரெட்டி, சன் டிவி விஜய் டிவி என பல சீரியல்களில் நடித்துள்ளார்.
ஜோதிகாவின் உடன்பிறப்பே...முழு ஆல்பம் இன்று வெளியீடு
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வருகிறார் பாவனி. தற்போது படங்களிலும் நடித்து வருகிறார் பாவனி.
வெப் சீரிஸ்களில் பாவனி
படம் ஒன்றில் ஆபாச காட்சியில் நடித்திருந்தார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது மேலும் சில படங்களில் கமிட்டாகியுள்ள பாவனி ரெட்டி வெப் சீரிஸ்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
வீட்டை எதிர்த்து திருமணம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை பாவனி ரெட்டி கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் தனது கடந்த காலத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். அதில் காதலர் பிரதீப்குமாரை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்டதாகவும், திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக சீரியலில் நடித்த தகவலையும் கூறினார்.
8 மாதங்களில் கணவர் தற்கொலை
ஆனால் திருமணம் ஆன 8 மாதங்களில் தனது கணவர் திடீரென ஒரு நாள் குடித்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் தன்னை, அண்ணன் போல் பழகியவருடன் சேர்த்து வைத்து தவறாக பேசினார்கள் என்றும் தான்தான் தன் கணவரை கொலை செய்துவிட்டதாகவும் கூறினார்கள் என்றும் கலங்கினார்.
கடைசி வரை தனிமைதான் போல்
மேலும் தனது மாமியார் குடும்பத்தினர் தான் தனக்கு ஆதரவாக இருந்தார்கள் என்றும் கூறினார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து வாழ்க்கையில் வேறு ஒரு காதல் வந்ததாகவும், திருமணம் வரை சென்ற அந்த காதல் முறிந்து விட்டதாகவும் கூறினார். மேலும் கடைசி வரை தனிமைதான் தன் நிலை போல என்றும் உருகினார் நடிகை பாவனி.
பாவனி சகோதரி விளக்கம்
அதேநேரத்தில் பாவனி ரெட்டிக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்ததாகவும் அதை அவர் மறைத்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் சில போட்டோக்களை ஷேர் செய்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பாவனி ரெட்டியின் சகோதரி விளக்கமளித்தார்.
பிரிந்து விட்டார்கள்
பாவனி ரெட்டியின் மறுமணம் குறித்த தகவல் வதந்தி என்றும் அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவில்லை என்றும் கூறினார். மேலும் பாவனி ஒருவரை விரும்பியதாகவும் ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை, பரஸ்பர புரிதலுடன் பிரிந்து விட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.
உலகிலேயே அவர்தான் அழகு
இந்நிலையில் பாவனியின் முன்னாள் காதலரான ஆனந்த் ஜாய் இன்ஸ்டாகிராமில் பாவனி ரெட்டிக்கு ஆதரவாக பதிவுகளை ஷேர் செய்து வருகிறார். இந்த உலகத்திலேயே பாவனிதான் அழகான பெண் என்றும், அவருக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் கூறியிருந்தார்.
மனைவியா? அல்லது தோழியா?
இதனை பார்த்த நெட்டிசன்கள், தற்போது பாவனி உங்களுக்கு மனைவியா? அல்லது தோழியா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஆனந்த் ஜாய், பாவனி தனக்கு அம்மா என்று கூறியுள்ளார். காதல் முறிவுக்கு பிறகும் பாவனி ரெட்டிக்கு ஆதரவாக அவரது முன்னாள் காதலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.