Don't Miss!
- News இவிஎம் இயந்திரத்தின் சோர்ஸ் கோட்.. அதெல்லாம் வெளியிட கோர முடியாது! உச்சநீதிமன்றம் கறார்
- Sports இவருக்கா இந்திய அணியில் இடமில்லை.. பொங்கி எழுந்த ரிஷப் பண்ட்.. அரண்டு போன குஜராத்
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை பவித்ரா லட்சுமி… நடிகர் சஞ்சீவ்… தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்!
சென்னை : குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
ரஜினிகாந்த், அருண்விஜய், சிம்ரன்,காஜல் அகர்வால், சாக்ஷி,நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
பிறந்த நாளில் டிவிட்டரில் இணைந்த பிரபல நடிகர்.. வரவேற்கும் சினிமா நட்சத்திரங்கள்!
இவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிடுவால் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருகின்றனர்.
மிகவும் கடுமையாக
கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் கடுமையாக இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
முதலில் தடுப்பூசி
முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், காவல்துறை சார்ந்தவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 18 வயது நிரம்பியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டார்
இதேபோல பல திரைப்பிரபலங்களும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர் இது பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக அமைகிறது. அந்த வகையில் நடிகர் சஞ்சீவ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை காவேரி மருத்துவமனையில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
முதல் டோஸ் தடுப்பூசி
குக்வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ஊசி மருந்து என்றால் எனக்கு பயம், நான் மிகவும் பயப்படுகிறேன். ஆனாலும் நான் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
விழிப்புணர்வு தேவை
மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள போதிய விழிப்புணர்வினை அரசு ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு தான் ஊரடங்கு கட்டுபாட்டில் இருந்து மக்கள் விடுபட முடியும் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து தடுப்பூசி போட முன்வர வேண்டும்.