ரஜினியை விட பவன் கல்யாண் 5 மடங்கு சிறந்தவர்- ராம் கோபால் வர்மா
ஹைதராபாத்: ரஜினியை விட பவன் கல்யாண் 5 மடங்கு சிறந்தவர் என இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய சர்ச்சையான கருத்துக்களால் மிகவும் புகழ்பெற்றவர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் வெளியான சர்தார் கப்பர் சிங் படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து பவன் கல்யாணை, ராம் கோபால் வர்மா தொடர்ந்து சீண்டி வந்தார்.
கோபமடைந்த பவன் கல்யாண் ரசிகர்கள் ராம் கோபால் வர்மாவைக் கண்டபடி சமூக வலைதளங்களில் திட்ட ஆரம்பித்தனர்.

இதனால் பயந்துபோன ராம் கோபால் வர்மா அவர்களை சமாதானப்படுத்த செய்த வேலையால், ரஜினி மற்றும் சிரஞ்சீவி ரசிகர்களின் கோபம் இவர்மீது திரும்பியுள்ளது.
'பவன் கல்யாண் ரஜினியை விட 5 மடங்கு சிறந்தவர். சிரஞ்சீவியை விட 10 மடங்கு சிறந்தவர்' இதுதான் ராம் கோபால் வர்மாவின் கருத்து.
இப்போ ரஜினி, சிரஞ்சீவி ரெண்டு பேரோட ரசிகர்களும் ட்விட்டர்ல ராம் கோபால் வர்மாவை வச்சி செய்றாங்க..


Click it and Unblock the Notifications











