Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
‘வக்கீல் சாப்‘ தொழில்நுட்ப கோளாரால் நிறுத்தம்… திரையரங்கை தும்சம் செய்த பவன் கல்யாண் ரசிகர்கள்!
சென்னை: பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் திரைப்படம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டால் ரசிகர்கள் திரையரங்கை சூறையாடினர்.
தமிழில் அஜீத் நடித்த நேர்கொண்டப்பார்வை தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்துள்ளார்.
அடங்கவே மாட்டீங்களா.மாராப்பை விலக்கி.. கவர்ச்சியாட்டம் போட்ட இலக்கியா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
இதில் பவன் கல்யாண், ஸ்ருதி ஹாசன், அஞ்சலி, நிவேதா தாமஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தெலுங்கில் வக்கீல் சாப்
இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பிங்க்கின் தெலுங்கு ரீமேக்தான் வக்கீல் சாப். இதில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்துள்ளார். தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.
படம் நிறுத்தப்பட்டது
தெலுங்கான மாநில ஜோகுலம்ப கட்டாவில் உள்ள ஒரு திரையரங்கில் வக்கீல் சாப் திரைப்படத்தை காண திருவிழாப்போல ரசிகர்கள் கூடினர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து பவன் கல்யாண் நடித்துள்ள படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில், நாயகன் பவன் கல்யாண் வரும் காட்சிக்கு முன்பே தொழில்நுட்ப கோளாரால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
கதவுகளை அடித்து நொறுக்கினர்
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்க இருக்கைகள் , தகவுகளை அடித்து நொறுக்கி தும்சம் செய்தனர். இதனால் திரையரங்கம் போர்க்களம் போல காட்சியளித்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை திரையரங்க நிர்வாகம் வெளியில் அனுப்பி இழுத்து பூட்டியது.
திரையரங்கம் சின்னபின்னமானது
இருப்பினும் ஆவேசம் குறையாத ரசிகர்கள் திரையரங்குக்கு வெளியில் சென்று கற்களை வீசி திரையரங்க ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். பட்டாசுகளையும் கொளுத்தி திரையரங்குக்குள் வீசினர். இதனால் திரையரங்கமே அமளி துமளி ஆனது. பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகும் போது திரையரங்க நிர்வாகம் சற்று கூடுதல் கவனத்தோடு திரையரங்குகளை பராமரித்து வைத்திருக்க வேண்டும். ரசிகர்களும் சற்று பொறுதை காத்து இருக்க வேண்டும் என்பது எங்களது கருத்து.