twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிரஞ்சீவி தம்பி பவனின் 3வது திருமணம்: ஆஸ்திரேலிய நடிகையை மணந்தார்

    |

    ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரும், நடிகருமான பவன் கல்யாணின் 3வது திருமணத்தைப் பற்றிய தகவல்கள் தான் தற்போது தெலுக்குப் பட உலகில் ஹாட் மேட்டர்.

    பரபரப்புகளுக்குச் சிறிதும் பஞ்சமில்லாதவர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரான நடிகர் பவன் கல்யாண். அண்ணன் சினிமாவில் மிகவும் கொடி கட்டிப் பறந்த காலத்தில் தான் சண்டைப் பயிற்சியாளராக ஆகப் போவதாகக் கூறி, கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றார். அதனைத் தொடர்ந்து அண்ணனின் கட்டாயத்தில் நடிகரானார்.

    pawan kalyan

    இந்நிலையில் தற்போது பிரபல நடிகராக உள்ள பவன் கல்யாண், தற்போது மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக வெளியான தகவலால் பெரும் சர்ச்சை உண்டாகியுள்ளது.

    அறிமுகம்...

    1996-ல் 'அக்கட அம்மாயீ, இக்கட அப்பாயீ' (அங்கே பொண்ணு, இங்கே பையன்) என்ற படத்தின் மூலம் தெலுங்குச் சினிமாவில் அறிமுகமானவர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண்.

    சர்ச்சை நாயகன்....

    அரங்கேற்றத்தின் போதே, கராத்தே வீரரான பவன், தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சென்னையில் உள்ள ஓர் அரங்கில் தனது கைகளின் மீது ஜீப்பை ஓடவிட்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பவன், தனது அண்ணன் சிரஞ்சீவியின் பேச்சை கேட்காமல் 'தெலுங்கு தேசம்' கட்சியில் சேரப்போவதாக பரபரப்பு செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

    காதல் திருமணம்...

    1997-ல் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நந்தினியை பவன் கல்யாண் திருமணம் செய்துகொண்டார். அப்போது அந்த கல்யாணம் இரு குடும்பத்தினருக்கும் விருப்பம் இல்லாத காதல் திருமணமாக கூறப்பட்டது.

    இரண்டாவது திருமணம்...

    அதனைத் தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக நந்தினியுடன் விவாகரத்து பெற்ற பவன், 2009-ல் தன்னுடன் 'பத்ரி', 'ஜானி' போன்ற படங்களில் நடித்த ரேணு தேசாயை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அகிரா நந்தன் என்ற மகனும், ஆத்யா என்ற மகளும் உள்ளனர்.

    மூன்றாவது திருமணம்...

    பிறகு ரேணு தேசாயுடன் என்ன கருத்து வேறுபாடோ தெரியவில்லை. அவரிடமிருந்தும் விலகினார் பவன். இந்நிலையில், தற்போது அன்னா லெழ்நோவா என்ற ஆஸ்திரேலிய நடிகையை பவன் கல்யாண் மூன்றாவது திருமணம் செய்துகொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    பதிவுத் திருமணம்...

    ஹைதராபாத், எர்ரகட்டா இணைப் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக பதிவாளர் பாசித் சித்திகீ உறுதிப்படுத்தியுள்ளார்.

    சாட்சிக் கையெழுத்து....

    கலை இயக்குநர் பி.ஆனந்தம் மற்றும் முகம்மத் அப்துல் ஆரிப், என்.சீனிவாசன் ஆகியோர் இத்திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்திட்டுள்ளதாகவும், பதிவு எண் 50, திருமணம் எண் 43ன் கீழ் இது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அன்னா லெழ்நோவா வெளிநாட்டவர் என்பதால் திருமணச் சட்டம், பிரிவு 13-ன் படி சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    குழந்தை உள்ளது....

    ஆனால், இந்த பதிவுத் திருமணம் நடப்பதற்கு முன்னதாகவே இருவரும் குடும்பம் நடத்தியதாகவும், அதில் குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இதை அவர்கள் பதிவுத் திருமணத்துக்கான வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

    குழப்பம்....

    இந்நிலையில் யார் இந்த அன்னா லெழ்நோவா என்பதுதான் தெலுங்குப் படவுலகின் மில்லியன் டாலர் கேள்வி. 'தீன்மார்' படத்தில் பவன் கல்யாணுடன் நடித்த டானா மார்க்ஸ் என்ற நடிகைதான் அன்னா லெழ்நோவா என்று ஒருதரப்பினர் கூறிக்கொண்டிருக்க, அந்த நடிகைக்கும், திருமணப் பதிவு பத்திரத்திலுள்ள புகைப்படத்துக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லையே என்று மற்றொரு தரப்பினர் மறுக்கின்றனர்.

    தொடரும் மவுனம்...

    ஆனால், பவன் கல்யாண் தரப்போ ஆம் என்றும் சொல்லாமல், இல்லையென்றும் மறுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    If reports are to be believed, Telugu cinema actor Pawan Kalyan has set in motion the process to legalise his relationship with his co-star in Teenmaar. Pawan has reportedly applied for registering his marriage at one of the Sub-Registrar Office in the city. This would be Pawan Kalyan's third marriage.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X