Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாலியல் விவகாரம்.. நீதிக்காக ஒவ்வொரு கதவையும் தட்டறேன்.. பிரபல நடிகை குடியரசு தலைவருக்கு கடிதம்!
மும்பை: பாலியல் விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்துள்ள பிரபல நடிகை, இப்போது குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நடிகை பாயல் கோஷ், இந்தி பட இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறி இருந்தார்.
சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தபோது வீட்டுக்கு வரவழைத்த அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி இருந்தார்.
எதுக்கு உனக்கு இந்த விளம்பரம்.. ஓவரோ ஓவர் ஆக்டிங்.. அறந்தாங்கி நிஷாவை விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்!
அப்படியே மறுப்பு
இதையடுத்து மும்பை வெர்சோவா போலீசில் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் புகார் கொடுத்தார். அவர் சொன்ன பாலியல் புகாரை, அப்படியே மறுத்திருந்தார் இயக்குனர் அனுராக் காஷ்யப். அவருக்கு ஆதரவாக நடிகர், நடிகைகளும், இயக்குனர்களும் கருத்துத் தெரிவித்தனர்.
ஏன் கைது செய்யவில்லை?
இந்நிலையில், அவரும் அவர் வழக்கறிஞரும், வெர்சோவா போலீஸ் ஸ்டேஷன் சென்று, ஏன் அனுராக் காஷ்யபை இன்னும் கைது செய்யவில்லை என்று கேட்டனர். பின்னர் போலீசார் அனுராக் காஷ்யபுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். பாயல் கோஷ் குறிப்பிட்டுள்ள தேதியில் தான் இலங்கையில் இருந்ததாக் கூறியிருந்தார், அனுராக்.
உரிய நடவடிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்துப் பேசினார் பாயல் கோஷ். இதனால் இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார் பாயல் கோஷ்.
ஏழை ஒருவரால்
அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு கொடூர குற்றத்தை செய்தவர் மீது மும்பை வெர்சாவோ போலீசில் புகார் செய்தேன். இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த குற்றம் ஏழை ஒருவரால் செய்யப்பட்டிருந்தால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும்.
செல்வாக்கு மிக்கவர்
ஆனால் என் விஷயத்தில், அவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால், அவர் சுதந்திரமாக சுற்றி வருகிறார். நான் நீதிக்காக ஒவ்வொரு கதவையும் தட்டி வருகிறேன். இந்நிலையில், இந்த விஷயத்தில் தலையிட்டு நீதியை பெற எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!