Peddi Day 1 collection: வசூல் வேட்டை ஆரம்பம்.. உலகளவில் முதல் நாளே மிரட்டிய ராம் சரணின் 'பெத்தி'!
சென்னை: புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, பொமன் இரானி மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் நடிப்பில் நேற்று 'பெத்தி' திரைப்படம் தியேட்டரில் வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு இருக்கும் திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே பார்வையாளர்களிடமிருந்து வலுவான வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் ஒரு அதிரடியான தொடக்கத்துடன் வசூலை அள்ளி உள்ளது.
பெத்தி: ஒரு மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பெயரற்ற கிராமம் ஒன்றில் நடக்கும் இத்திரைப்படம், பெரும்பாலான மக்கள் சாதாரணமானது என கருதும் ஒரு விஷயத்திற்காகப் போராடும் ஒரு சமூகத்தை மையமாகக் கொண்டுள்ளது. அந்தக் கிராமத்தில் அடிப்படை வசதி, அங்கீகாரம் எதுவுமே இல்லாத ஒரு கிராமத்தைச் சேர்ந்த, படிப்பறிவில்லாத ஒரு இளைஞன் தான் இந்த பெத்தி. அந்த ஊர் மக்கள் அனைவரும் வயிற்று பிழைப்புக்காக விஜயநகரத்திற்குச் சென்று வருகிறார்கள்.

கதைக்களம்: பெத்தியின் விளையாட்டை பார்த்து அசந்து போன ஒருவர் அவரை ஏலத்தில் எடுத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைக்கிறார்கள். இதன் மூலம் பிரபலம் ஆகியார். அடிப்படை வசதி இல்லாதெ இந்த கிராமத்தில் ரயில் நின்று செல்ல வேண்டும் என ஜகபதி பாபு பெரும் முயற்சி எடுக்கிறார். ரயில் நின்றால், அதன் மூலம் குழந்தைகளுக்குக் கல்வியும் மருத்துவ வசதியும் கிடைக்கும் என்பதும் அவரது நம்பிக்கை. இதற்காக அதிகாரிகளையும், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரையும் மீண்டும் மீண்டும் சந்தித்து மனு கொடுத்தும் பயன் இல்லை.
அதே நேரம் பெத்தியை, விளையாடவிடக்கூடாது, அவனை முடக்க வேண்டும் என ஊரில் உள்ள இரண்டு கோஷ்டிகளும் ஒன்று சேர்கின்றன. இவர்களை எல்லாம் எதிர்த்து பெத்தி எப்படி ஜெயித்தார்... அந்த மலை கிராமத்தில் ரயில் நின்றதா... என்பதே பெத்தி படத்தின் மீதி கதை. ராம்சரண் வழக்கம் போல இந்த படத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
முதல் நாள் வசூல்: நேற்று 12,412 திரையரங்குகளில் வெளியான இப்படம் இந்தியாவில் ₹82.49 கோடியையும், வெளிநாடுகளில் இப்படம் ₹30.00 கோடியை வசூலித்துள்ளது. இதனால் உலகளவில் பெத்தி படம் ₹112.49 கோடியை வசூலித்து மாஸ் காட்டி உள்ளது.ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் ரூ. 48.00 கோடியும் கர்நாடகாவில் ரூ. 5.75 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 1.50 கோடியும்,கேரளாவில் ரூ. 25 லட்சத்தை வசூலித்துள்ளத. மற்ற மாநிலங்களிலும் பெத்தி கணிசமான வசூலை அள்ளி உள்ளது. படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருவதால்,இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications