Peddi Twitter Review: பெத்தி டிவிட்டர் விமர்சனம்.. ராம் சரணுக்கு கம்- பேக்கா? இல்லையா?
சென்னை: மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடிப்பில், புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பெத்தி' திரைப்படம் ஜூன் 3 அன்று பிரீமியர் செய்யப்பட்டு, ஜூன் 4 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் பான்-இந்தியா படமாக வெளியானது. விருதி சினிமாஸ், ஐவி ஒய் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்க, டீசர்கள், டிரெய்லர்கள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கின. இந்நிலையில் படத்தை பிரீமியர் காட்சியில் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல விமர்சகர் ராம் பாலா தனது எக்ஸ் பக்கத்தில் படத்தை வெளிநாட்டில் சென்சார் செய்தபோது பார்த்தவர்கள், சொன்னதாக விமர்சனம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், " இயக்குனர் புச்சி பாபு சனா, உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் மாஸ் எலிமெண்ட்டுகள் நிறைந்த ஒரு அழுத்தமான திரைக்கதையை இப்படத்திற்காக உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இப்படத்திற்காக நடிகர் ராம் சரண் மிகப்பெரிய உடல்மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். இதுவரை அவரது திரைப்பயணத்திலேயே பார்க்காத அளவிற்கு, முற்றிலும் மாறுபட்ட அசாத்தியமான எமோஷனல் நடிப்பை இப்படத்தில் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும், இது அவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல் திரைப்படமாக அமையும்.
கதைக்கு வலு சேர்க்கும் முக்கிய அம்சங்கள்: அதேபோல், படத்தில் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் இடையேயான காதல் காட்சிகள், கதைக்கு ஒரு புத்துணர்ச்சியான திருப்பத்தை தரும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் ஜகபதி பாபுவின் கதாபாத்திரம், படத்தின் கதைக்களத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மிகவும் கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானின் இசை மேஜிக்: படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக, படத்தின் இரண்டாம் பாதியில் வரும் அவரது பின்னணி இசை ரசிகர்களுக்கு திரையரங்குகளில் ஒரு சிறந்த தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

அதேபோல் படத்தை தெலுங்கில் ப்ரீமியர் ஷோக்களில் பார்த்த ரசிகர்கள் சிலர்," படம் முழுக்க ராம் சரண் மாஸாக இருக்கிறார். முதல் பாதி எப்படி போனது என்றே தெரியவில்லை, ரகுமான் இசையில் பிச்சுட்டாரு" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர் கூறுகையில், " திரையில் இருந்து கண்களை நகர்த்த முடியவில்லை. ராம் சரணுக்கு இது பக்காவான கம் பேக் படம். மாஸ் சீன்கள் மட்டும் இல்லாமல், எமோஷன் காட்சிகளும், நன்றாகவே ஒர்க் - அவுட் ஆகி உள்ளது. இடைவேளை காட்சி எல்லாம் தரமோ தரம், படம் பிளாக் பஸ்டர்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ படத்தில் உள்ள சண்டைக் காட்சிகளில் இரண்டு ரவுடிகளுடன் சண்டையிடும் காட்சிதான் படத்தில் இருக்கும் மொத்த சண்டைக் காட்சிகளிலேயே, தரமான சண்டைக் காட்சியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துள்ளதால், படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது.


Click it and Unblock the Notifications