Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆர்யாவுக்கு இவ்ளோ பெரிய மனசா: நம்ப முடியலயே பாஸு
Recommended Video
சென்னை: எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை பார்ப்பவர்களால் ஆர்யாவின் செயல்களை நம்ப முடியவில்லை.
ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டு ஆர்யாவை மணக்கும் கனவோடு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள்.
ஆர்யாவும் அந்த பெண்களுடன் நன்றாக கடலை போடுகிறார்.
பெண்கள்
ஆர்யா அந்த பெண்கள் அனைவரிடமும் நெருக்கமாக பழகுகிறார். சர்வ சாதாரணமாக தோளில் கை போடுகிறார். இதை டிவியில் பார்க்கும் பெண்கள் ஆர்யாவை திட்டித் தீர்க்கிறார்கள்.
குடும்பம்
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெண்களின் நடவடிக்கைகளை பார்க்கும் பார்வையாளர்கள் இவர்களை பெற்றவர்களுக்கு வெ, மா, சூ, சொவே இல்லையா, இப்படி அனுப்பி வைத்துள்ளார்களே என்று கோபப்படுகிறார்கள்.
எதிர்ப்பு
நம் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி உள்ளது என்று பலரும் குமுறுகிறார்கள். நிகழ்ச்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
கடந்த காலம்
போட்டியில் கலந்து கொண்டுள்ள பெண்கள் தங்களின் முன்னாள் காதலர்கள் பற்றி ஆர்யாவிடம் தெரிவிக்க அவரோ பரவாயில்லை என்கிறார். ஒரு பெண் விவாகரத்தாகி தனக்கு ஒரு மகன் இருக்கிறார் என்று கூறியதை கூட ஆர்யா ஈஸியாக எடுத்துக் கொண்டார்.
நம்ப முடியவில்லை
ஆர்யா மற்ற பெண்களின் கடந்த காலத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதை பார்த்த பார்வையாளர்களோ அவருக்கு அவ்வளவு பெரிய மனதா, நம்பும்படி இல்லையே என்கிறார்கள்.
இறுதி
ஆர்யா நடந்து கொள்வதை எல்லாம் பார்த்தால் ஜாலியாக கடலை போட்டுவிட்டு கடைசியில் வெற்றி பெறுபவரை திருமணம் செய்வது போன்று தெரியவில்லை என்றே பலரும் கூறுகிறார்கள். ஆர்யா வெற்றியாளரை திருமணம் செய்கிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.