பொங்கல் திருவிழா.. களைகட்டும் திரையரங்கம்.. வெடிக்க வருது பட்டாஸ்
சென்னை : பொங்கல் விடுமுறையில் களைகட்டப்போகும் திரையரங்குகள் பட்டாஸ் படத்தை வரவேற்க தயாரான ரசிகர்கள்.
பொங்கல் விடுமுறை களைகட்டத் தொடங்கி விட்டது. பொங்கலை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தை செலவிடுவது என்று பலரும் பல வகையான திட்டங்களை பொங்கலுக்கு வைத்துள்ளனர். அதில் பலருக்கும் இருக்கும் திட்டம் சினிமா பார்க்க திரையரங்கு செல்வது தான் .

ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு குறைந்தது இரண்டு படங்களாவது வெளிவந்து விடும். மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரையரங்குகளில் படங்களை பார்த்து பொங்கலை கொண்டாடுவார்கள். அதை போல இந்த வருடம் பொங்கலுக்கு தர்பார் படம் வெளியாகி இருக்கிறது நாளை தனுசின் பட்டாஸ் படம் வெளியாகவுள்ளது .
கடந்த வருடம் ரஜினியின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் வந்து மக்களுக்கு பொங்கல் விருந்து அளித்தது .அதே போல இந்த வருடமும் ரஜினி படம் வந்து வெளியாகி உள்ளது. அதே போல் நாளை பட்டாஸ் படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியாக உள்ளது. அசுரன் பட வெற்றிக்கு பிறகு தனுஷ் ரசிகர்கள் பட்டாஸ் படத்தை மிகவும் எதிர்பார்த்து உள்ளனர். பப்ஜி பாடல் என்று சில்லாக ஒரு ஹீரோ களரி சண்டை என மாஸாக ஒரு ஹீரோ என்று இரு வேறு தனுசை முன்னோட்டத்தில் காட்டி இருக்கிறார்கள். நாளை முதல் பட்டாஸ் படம் தனது வசூல் வேட்டையை துவங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது .

ஆனால் குடும்பமாக பொங்கலை கொண்டாட நினைக்கும் மக்கள் பொங்கல் வாரத்தில் தான் தர்பார் படத்தை பார்பார்கள் என்பதனால் தர்பார் படத்தின் வசூலும் எந்த விதத்திலும் குறைய வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
தர்பார் படம் தற்போதே 150 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்திருப்பதால். வரவிருக்கும் வாரம் தர்பாருக்கு லாப திருவிழா தான், லைகா நிறுவனம் இந்த படத்தின் மூலம் மிக பெரிய வசூலை தீட்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது.



Click it and Unblock the Notifications











