Don't Miss!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆம்பள செஞ்சா தப்பில்ல, நான் செஞ்சா மட்டும் பெரிய குத்தமா?: ப்ரியங்கா சோப்ரா
மும்பை: ஒரு ஆண் செய்தால் தவறு இல்லை. அதையே நான் செய்ததால் பெரிய குற்றம் போன்று பேசுகிறார்கள் என்று பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று கிட்டத்தட்ட அங்கேயே செட்டில் ஆகிக் கொண்டிருக்கும் ப்ரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது சிறியவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அவருக்கு திருமணம் என்ற பேச்சு எழுந்ததில் இருந்து இன்னும் அவர்களின் வயது வித்தியாசம் பற்றி சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.
ப்ரியங்கா சோப்ரா
ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் செட்டிலாக வசதியாக அமெரிக்கரான நிக் ஜோனஸை திருமணம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அமெரிக்காவுக்கு சென்ற ப்ரியங்கா நிக் என்னும் குழந்தையை தத்தெடுத்து திருமணம் செய்து கொண்டதாக மீம்ஸ் போட்டு கலாய்த்தார்கள். அந்த மீம்ஸை பார்த்து பாலிவுட் பிரபலங்கள் கோபம் அடைந்து ப்ரியங்காவுக்கு ஆதரவாக பேசினார்கள். இந்நிலையில் வயது வித்தியாசம் பற்றி ப்ரியங்காவே மனம் திறந்து பேசியுள்ளார்.
|
வயது வித்தியாசம்
எனக்கும், என் கணவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பற்றி மக்கள் நிறைய பேசினார்கள், இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆண் தன்னை விட வயதில் மிகவும் குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டால் யாரும் கண்டுகொள்வது இல்லை. சொல்லப் போனால் அந்த ஜோடியை அவர்களுக்கு பிடிக்கிறது. அதுவே நான் செய்தால் மட்டும் தவறா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ப்ரியங்கா சோப்ரா.
|
கணவர்
திருமணம் முடிந்த புதிதில் கலாச்சார வித்தியாசம் காரணமாக எனக்கும், நிக் ஜோனஸுக்கும் இடையே சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்தது. ஆனால் அது சரியாகிவிட்டது. சொல்லப் போனால் நிக் என்னை நன்கு புரிந்து கொண்டு மிகவும் ஆதரவாக உள்ளார். நான் சரியான நபரை தான் தேர்வு செய்து திருமணம் செய்துள்ளேன் என்று ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
|
அன்பு
ப்ரியங்காவுக்கும், நிக்கிற்கும் இடையே பிரச்சனையாக உள்ளது. அவர்கள் விவாகரத்து நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்று முன்பு செய்தி வெளியானது. ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கம் போனால் நிக்கும், ப்ரியங்காவும் ஒரே கொஞ்சல்ஸாக உள்ளது. இதை பார்ப்பவர்கள் வாவ், என்ன ஒரு காதல் என்கிறார்கள்.