Don't Miss!
- News சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலைக்கு போறீங்களா? சென்னையில் இருந்து இன்று சிறப்பு ரயில் இயக்கம்
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Finance இந்தியாவின் வேலைவாய்ப்பு வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் புளூ காலர் வேலைகள்..!!
- Lifestyle இன்று அனுமன் ஜெயந்தி 2024.. இந்த மந்திரத்தை ஜபித்தால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்..!
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
Exclusive : வீடு, உதிரிப்பூக்கள் மாதிரி ‘டு லெட்’யும் மக்கள் கொண்டாடுவார்கள்: செழியன் நம்பிக்கை
உண்மையான படங்களை நிச்சயம் மக்கள் கொண்டாடுவார்கள் என டு லெட் பட இயக்குநர் செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னை : டு லெட் படத்தை மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என இயக்குனர் செழியன் தெரிவித்துள்ளார்.
சிறந்த திரைப்படத்துக்கான இந்திய தேசிய விருது, இத்தாலி, இந்தோனேசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 32 விருதுகளை வென்ற படம் டு லெட். இப்படத்தை இயக்கியவர் செழியன்.
சென்னை பெருநகரில் வாடகை வீடுகளில் பல இன்னல்களை சந்தித்து வரும் பல ஆயிரம் குடும்பங்களின் நிலையை, ஒரு குடும்பத்தின் திண்டாட்டத்தை முன்மாதிரியாகக் காட்டி பதிவு செய்திருக்கிறது டு லெட்.
இப்படம் இன்று வெளியாவதையொட்டி இயக்குனர் செழியனை சந்தித்தேன். அவருடன் உரையாடியதில் இருந்து,
மாற்றம்:
" டு லெட் ஒரு எதார்தமான படம். உதிரிப்பூக்கள், வீடு போன்ற படங்களை கொண்டாடியது போன்ற என் படத்தையும் மக்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். தற்போது தமிழ் சினிமா நிறைய மாறியிருக்கிறது. எதார்த்தமான படைப்புகள் நிறைய வருகின்றன. மக்கள் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையான படம்:
நான் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் தான் டு லெட் படத்தை எடுத்துள்ளேன். எனது நண்பர்களுக்கும் இந்த அனுபவம் உள்ளது. இது ஒரு உண்மையான படம். ஒரு படத்தில் உண்மை இருந்தால், அது நிச்சயம் ஜெயிக்கும். உண்மையான படைப்பை மட்டுமே உலக சினிமாவாக கொண்டாட முடியும்.
முக்கியக் காரணம்:
டு லெட் படத்தை பொறுத்த வரை இதில் பெரிய நடிகர்களை நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை. நடிகர் அல்லாதவர்களை தான் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதனால் தான் எனது உதவியாளராக பணியாற்றி வந்த சந்தோஷையும், நாடக கலைஞரான ஷீலாவையும் இந்த படத்தில் நடிக்க வைத்தேன். நான் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. படம் எதார்த்தமாக வருவதற்கு அது முக்கிய காரணமாக அமைந்தது.
முக்கியக் காரணம்:
டு லெட் படத்தை பொறுத்த வரை இதில் பெரிய நடிகர்களை நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை. நடிகர் அல்லாதவர்களை தான் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதனால் தான் எனது உதவியாளராக பணியாற்றி வந்த சந்தோஷையும், நாடக கலைஞரான ஷீலாவையும் இந்த படத்தில் நடிக்க வைத்தேன். நான் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. படம் எதார்த்தமாக வருவதற்கு அது முக்கிய காரணமாக அமைந்தது.
விருதுகளும், பாராட்டுகளும்:
உலக திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் டு லெட் படத்தை பாராட்டியிருக்கிறார்கள். நூறு திரைப்பட விழாக்களுக்கு மேல் பங்கேற்று, 84 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு, 32 விருதுகளை வென்றிருக்கிறது டு லெட். படத்தில் உள்ள உண்மை தான் இத்தனை பாராட்டுகளுக்கும் காரணம். உலக ரசிகர்கள் கொண்டாடிய இந்த சினிமாவை என் மக்களும் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்", என நம்பிக்கையுடன் விடைபெறுகிறார் இயக்குனர் செழியன்.
இயக்குநர் செழியனின் வீடியோ பேட்டியைப் பார்க்க...
அதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி
-
குரு துரோணர் மகனையே கொண்டு வந்த நாக் அஸ்வின்.. பிரபாஸின் கல்கி படத்தில் அமிதாப் பச்சன் ரோல் என்ன?
-
அவசரத்துக்கு கேரவன்ல ஏறினேன்.. அந்த ஹீரோயினோட அம்மா விரட்டி விட்டாங்க.. நடிகை காயத்ரி ரேமா வேதனை!
-
கும்முன்னு இருக்கன்னு சொல்லி பிரபல இயக்குநர் பின்னாடி புடிச்சிட்டாரு.. பகீர் கிளப்பிய நடிகை காயத்ரி!