Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மறுக்கப்பட்டது தேசிய விருது.. குவிகிறது பல திரை விருதுகள்.. பேரன்பிற்கு கிடைத்த பேரன்பு!
Recommended Video
சென்னை : இயக்குனர் ராம் இவர் இயக்குனர் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் இருந்து கண்டெடுத்த முத்து பல வருடங்கள் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின் இயக்குனர் ஆனார்.
தனது முதல் திரைப்படத்தில் ஒரு அழகியே காதல் கதையை வேறு ஒரு வடிவில் கூறி இருப்பார். படத்தில் நடித்த ஜீவா மற்றும் அஞ்சலியின் நடிப்பு இன்றளவும் பேசப்படுகிறது.
படத்திற்கு ஏற்றது போல படத்தின் பெயர் அமைந்துள்ளது கற்றது தமிழ் பி.ஏ படத்தில் ஒலித்த "பறவையே எங்கு இருக்கிறாய்" பாடல் இன்றளவும் ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்துள்ளது.
தனது இரண்டாவது படத்தை ஐந்து வருடங்கள் கழித்து எடுத்தார் ராம் படத்தில் அவரும் நடித்தார். ஒரு அப்பா மற்றும் மகள் இடையே நடக்கும் பாச போராட்டத்தை ஒரு யாததார்த்தமான திரைக்கதை உடன் நமக்கு வழங்கி இருந்தார் ராம்.
தனது இரண்டாவது படத்திலே இந்தியாவின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார். இப்படத்திற்காக மூன்று விருதை பெற்றுத்தந்தார் இயக்குனர் ராம். இதில் நா. முத்துக்குமார் வரிகளில் வரும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலில் வரும் வரிகள் ஒரு தந்தை தன் மகளின் மேல் இருக்கும் பாசத்தை வர்ணிக்கும் ஒரு நல்ல பாடலாக அமைந்து இருந்தது.
தனது மூன்றாவது படமாக தரமணி என்ற படத்தை இயக்கினார் ராம் படத்தில் ஒரு ஆண்மகன் மற்றும் ஒரு பெண்மணி இடையே நடக்கும் கோபம், காதல், நட்பு, பாசம். போன்ற பல விஷயங்களை உள் புகுத்தி நமக்கு ஒரு நல்ல சிறந்த படமாக வழங்கி இருப்பார் ராம்.
இப்படம் மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது தணிக்கை குழு படத்திற்கு வழங்கிய சான்றிதழ் பிரச்சனையை ஏற்படுத்தியது. இப்படம் பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் செலக்ட் செய்யப்பட்டது. மற்றும் பல சினிமா விருதுகளையும் பெற்றது.
நான்காவது திரைப்படமாக பேரன்பு என்ற படத்தை இயக்கினார் ராம். படத்தில் மம்மூட்டி மற்றும் சாதனா அஞ்சலி நடித்து இருந்தனர். படம் எதிர் பார்த்த வெற்றியை பெறவில்லை. ஒரு தந்தை தன் மாற்றுத்திறனாளி மகளை எப்படி வளர்க்கிறார் அவள் சமூகத்தில் சந்திக்கும் அவலங்களில் இருந்து எப்படி காப்பாற்றபடுகிறாள் என்று ஒரு தந்தை துடிக்கும் ஒரு பாச போராட்டம் தான் பேரன்பு.
படம் பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் மிகவும் பேசப்பட்டது. படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்று எல்லோராலும் எண்ணப்பட்டது, ஆனால் கிடைக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஜீ தமிழ் சினிமா விருது விழாவில் பேரன்பு படத்திற்கு சிறந்த கதைக்கான விருது வழங்கப்பட்டது.
வெளிநாட்டு ரசிகர்கள் ரசித்துப் பாராட்டிய ராமின் பேரன்பு தியேட்டர்களில் ஓடவில்லை என்றாலும், தமிழ் சினிமாவின் பொக்கிஷ பட்டியலில் என்றும் நிலைத்திருக்கும்.