Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜீவனாம்சம் கேட்கும் பேரரசு மனைவி!
இயக்குநர் பேரரசுவின் மனைவி தனக்கும் தன் குழந்தைக்கும் சேர்த்து மாதம் ரூ 15,000 ஜீவனாம்சம் தர வேண்டும் என கோ> வழக்குதொடர்ந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்தவர் இயக்குநர் பேரரசு. விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி, விஜயகாந்த்தை வைத்துதர்மபுரி ஆகிய படங்களை இயக்கியவர்.
இவருக்கும், ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த சாந்திக்கும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு விருத்திகா என்ற பெண்குழந்தையும் உள்ளது.
பேரரசு உதவி இயக்குநராக இருந்தபோது இவர்களது திருமணம் நடந்தது. கல்யாணத்தின்போது சாந்தி வீட்டு சார்பில் வரதட்சணையாக நகை,பணம் கொடுக்கப்பட்டது. இருவரும் தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர்.
பின்னர் பேரரசு இயக்குநராக மாறியதும், கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். சாந்தி தனது தாய் வீட்டுக்குச்சென்று விட்டார்.
கடந்த ஆண்டு கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி பவானி நீதிமன்றத்தில் சாந்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போதுஅவர் சரியாக ஆஜராகாததால், ஒரு தலையாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருவருக்கும் விவாகரத்தும் வழங்கப்பட்டது.
அதன் பின்னர், சாந்தி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தான் பழைய முகவரி கொடுத்ததால், வழக்கு விசாரணை தனக்குதெரியாமல் போய்விட்டது. எனவே விவாகரத்து வழங்கியது செல்லாது என அறிவிக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்னும்நிலுவையில் உள்ளது.
இந் நிலையில், கணவரைப் பிரிந்து வாழ்வதால், தானும் மகளும் மிகுந்த சிரமப்படுவதாகவும், மாதந்தோறும் தனக்கு ரூ. 10 ஆயிரமும், மகளுக்கு ரூ.5,000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் சாந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.