twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யின் கத்தி பட ஷூட்டிங்கிற்கு திடீர் அனுமதி மறுப்பு!

    By Siva
    |

    சென்னை: கத்தி படப்பிடிப்பை நடத்த சென்னை விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் வேறு வழியின்றி படப்பிடிப்பை வேறு இடத்தில் நடித்த வேண்டியதாகிவிட்டதாம்.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் கத்தி. சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பை நடத்த முருகதாஸ் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கினார். மேலும் பல லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி படப்பிடிப்பை நடத்தினார்.

    Permission denied for shooting: Kaththi team shocked

    இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் மூன்றாவது நாள் படப்பிடிப்பை இங்கு எல்லாம் நடத்தக் கூடாது என்று விமான நிலைய அதிகாரிகள் திடீர் என்று தெரிவித்துவிட்டார்களாம். விமான நிலையத்தில் முருகதாஸ் ஒரு பாடல் காட்சியை வேறு படமாக்க நினைத்திருந்தார். இந்நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதால் வேறு வழியின்றி இடத்தை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

    இதையடுத்து ஹைதராபாத் விமான நிலையத்தில் படப்பிடிப்பை நடத்த அனுமதி பெற்று அங்கு சென்றுவிட்டார். முன்னதாக கடந்த மாதம் சென்னை விமான நிலையத்தில் முருகதாஸ் கத்தி படத்தின் சில காட்சிகளை படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    As Chennai airport officials denied permission for shooting, Kaththi team was shocked.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X