Don't Miss!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
விஜய்யின் கத்தி பட ஷூட்டிங்கிற்கு திடீர் அனுமதி மறுப்பு!
சென்னை: கத்தி படப்பிடிப்பை நடத்த சென்னை விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் வேறு வழியின்றி படப்பிடிப்பை வேறு இடத்தில் நடித்த வேண்டியதாகிவிட்டதாம்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் கத்தி. சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பை நடத்த முருகதாஸ் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கினார். மேலும் பல லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி படப்பிடிப்பை நடத்தினார்.
இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் மூன்றாவது நாள் படப்பிடிப்பை இங்கு எல்லாம் நடத்தக் கூடாது என்று விமான நிலைய அதிகாரிகள் திடீர் என்று தெரிவித்துவிட்டார்களாம். விமான நிலையத்தில் முருகதாஸ் ஒரு பாடல் காட்சியை வேறு படமாக்க நினைத்திருந்தார். இந்நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதால் வேறு வழியின்றி இடத்தை மாற்ற வேண்டியதாகிவிட்டது.
இதையடுத்து ஹைதராபாத் விமான நிலையத்தில் படப்பிடிப்பை நடத்த அனுமதி பெற்று அங்கு சென்றுவிட்டார். முன்னதாக கடந்த மாதம் சென்னை விமான நிலையத்தில் முருகதாஸ் கத்தி படத்தின் சில காட்சிகளை படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.