twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வனிதாவால் நடுத்தெருவுக்கு வந்துட்டேன்.. பிளாட்ஃபார்மில் கூட தங்க முடியவில்லை.. பீட்டர் பால்!

    |

    சென்னை: நடிகை வனிதாவை நம்பி தான் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாக புலம்பி வருகிறாராம் பீட்டர் பால்.

    நடிகை வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்தார்.

    பீட்டர் பால் மீண்டும் மதுவுக்கு அடிமையானதால் அவரை பிரிந்ததாகவும் பீட்டர் பாலை நம்பி தான் ஏமாந்து போய் விட்டதாகவும் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டார்.

    மீண்டும் முயற்சி

    மீண்டும் முயற்சி

    இந்நிலையில் பீட்டர் பால் சென்றதால் வனிதா தனது யூடியூப் சேனலை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டதாகவும் இதற்காக அவர் பீட்டர் பாலை மீண்டும் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியானது.

    முகத்திலேயே முழிக்காத

    முகத்திலேயே முழிக்காத

    ஆனால் பீட்டர் பாலோ எந்த முகத்தை வச்சுக்கிட்டு இங்க வந்த, என் முகத்திலேயே முழிக்காத என விரட்டியதாகவும் கூறப்பட்டது. மேலும் வனிதாவை அடிக்கப் பாய்ந்ததாகவ

    ஒட்டும் இல்லை உறவும் இல்லை

    ஒட்டும் இல்லை உறவும் இல்லை

    ஆனால் இந்த தகவல்களை திட்டவட்டமாக மறுத்தார் வனிதா, நான் வேண்டுமானால் யாரையாவது ரிஜெக்ட் செய்வேன், என்னை யாரும் ரிஜெக்ட் செய்ய முடியாது என கூறினார். மேலும் பீட்டர் பாலுடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும் கூறி அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் வனிதா.

    தலைக்காட்ட முடியல..

    தலைக்காட்ட முடியல..

    இந்நிலையில் பீட்டர் பால் குறித்து ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. அதவாது பீட்டர் பால் இருக்க இடம் இல்லாமல் பார்க்கிங் , அங்கு இங்கு என தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பீட்டர் பாலின் மானத்தை வனிதா கூறு போட்டு விற்று விட்டதால் அவரால் வெளியே தலைக்காட்ட முடியாமல் போனது.

    நண்பரின் வீட்டில்

    நண்பரின் வீட்டில்

    பீட்டர் பால் வேலை பார்த்த அலுவலகத்தில் தங்கியிருந்தார். அங்கு சென்றும் அவரை அசிங்கப்படுத்தி விட்டாராம் வனிதா. இதனால் ஆபிஸ் பார்க்கிங்கில் இருந்த பீட்டர் பால் பின்னர் அங்கிருந்து தனது நண்பரின் வீட்டில் போய் தங்கியிருந்தார்.

    வனிதாவின் அறிமுகம்

    வனிதாவின் அறிமுகம்

    தற்போது அங்கிருந்தும் வெளியேறிவிட்டாராம் பீட்டர் பால். எங்கு செல்வது என தெரியாமல் தற்போது நினைத்த இடத்திலும் கிடைத்த இடத்திலும் நேரத்தை கழித்து வருகிறாராம். வனிதாவின் அறிமுகம் கிடைப்பதற்கு முன்பு யாருக்கும் தெரியாமல் இருந்தார் பீட்டர் பால்.

    புலம்பும் பீட்டர் பால்

    புலம்பும் பீட்டர் பால்

    தற்போது எல்லாருக்கும் தெரிந்த நபராகிவிட்டதால் முன்பு போல் எங்கும் செல்ல முடியவில்லை என்றும் பிளாட்ஃபாமில் கூட தங்க முடியவில்லை என்றும் தெரிந்தவர்களிடம் புலம்பி வருகிறாராம் பீட்டர் பால்.

    English summary
    Peter Paul blabbering with friends that he could not stay in Platform also. He also says to his friends that because of Vanitha he came to street.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X