Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வௌக்கு வச்சு பாத்தாங்களா.. எப்படி அப்படி சொல்லலாம்.. வனிதாவை வச்சு வாங்கிய பீட்டரின் முதல் மனைவி!
சென்னை: கணவர் பீட்டர் பாலுக்கும் தனக்கும் எந்த கனெக்ஷனும் இல்லை என்று வனிதா எப்படி சொல்லலாம் என அவரது முதல் மனைவி ஹெலன் விளாசியிருக்கிறார்.
Recommended Video
நடிகை வனிதா கடந்த சனிக்கிழமை தனது காதலரான பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்தில் வனிதா லிப்லாக் முத்தம் கொடுத்ததே பெரும் விமர்சனமானது.
அதனை தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவி போலீஸ் புகார், வனிதாவுக்கும் அவருக்குமான வார்த்தை போர் என நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஹெலன் சொல்வது உண்மையாக இருந்தால் வனிதாவே பீட்டர் மீது வழக்கு தொடராலாம்.. வக்கீல் போட்ட புது குண்டு!
விளாசிய வனிதா
அண்மையில் பீட்டர் பாலின் முதல் மனைவியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை வனிதா தனது யூட்யூப் சேனலில் பேசியிருந்தார். அப்போது பீட்டரின் முதல் மனைவியான ஹெலனை கன்னாபின்னாவென விளாசியிருந்தார்.
இதெல்லாம் கல்ட்சரா?
ஏழரை வருடங்களாய் இல்லாமல் இப்போது ஏன் வந்தீர்கள், சாப்பிட்டாரா இல்லையா என்று கேட்கக்கூட ஆள் இல்லை என்றும், பீட்டர் பால் ஒரு டீடோட்லர் என்றும் கடவுள்களுக்கே இரண்டு மனைவி என்றும் இதெல்லாம் கல்ட்சரா என்றும் வெளுத்து வாங்கியிருந்தார் வனிதா.
மருமகளே வா..
இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் வனிதாவின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார். அதில் பீட்டர் பாலின் அம்மா வனிதாவை மேடம் என்றுதான் பேசினார்கள்.. பையன கல்யாணம் பண்ணிக்கோ லவ் பண்ணு.. நான் துணையா இருக்கேன் என்றோ மருமகளே வா என்றெல்லாம் பேசவில்லை.
சட்டையை கழட்டி பாருங்க
பீட்டரை ஒரு டீடோட்லர்னு சொல்றதெல்லாம் பொய். 2 முறை மறுவாழ்வு மையத்திற்கு போய் வந்துள்ளார். அங்கேயிருந்து எஸ்கேப் ஆகும் போது அவரு உடம்பில் காயம் ஏற்பட்டது. யாராவது வேண்டுமானாலும் சட்டையை கழட்டி பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
வனிதாவால் பிரச்சனை
வனிதாவால் பீட்டர் மீண்டும் குடிக்க தொடங்கினார். சமீபத்தின் என் மகன் போன் செய்தபோது பாரில் இருப்பதாக கூறினார் பீட்டர். ஏன் மீண்டும் ஆரம்பித்தீர்கள் என்று கேட்டதற்கு வனிதா வீட்ல பிரச்சனை, வனிதாவால் பிரச்சனை என்று போனில் என் மகனிடம் சொன்னார் வனிதா.
எப்படி சொல்லலாம்?
கடவுளுக்கு ரெண்டு பொண்டாட்டி என்று கூறுகிறாரே வனிதா, அப்போ, நம்ம ரெண்டு பேரும் பொண்டாட்டியா இருக்கலாமா என்று கேட்டுள்ள ஹெலன் எதற்கு கடவுளையெல்லாம் இழுக்கிறார் என்றும் கேட்டுள்ளார். மேலும் தனக்கும் பீட்டருக்கும் எந்த கனெக்ஷனும் இல்லை என்று அவர் எப்படி சொல்லலாம்?
விளக்கு வைத்தா பார்த்தார்?
எங்களுக்குள் கனெக்ஷன் இல்லை என்பதை அவர் விளக்கு வைத்தா பார்த்தார் என்றும் விளாசியிருக்கிறார். மேலும் கனெக்ஷன் இல்லாவிட்டால் எப்படி பிப்ரவரி மாதம் எங்களுடன் சேர்ந்து ஃபேமிலி போட்டோ எடுத்திருப்பார் என்றும் சரமாரியாக சாடியிருக்கிறார்.
ஏன் அழைக்கவில்லை
பீட்டரின் அம்மாவுக்கு தெரியும், என் மகனுக்கு தெரியும் என்கிறாரே பின்னர் ஏன் திருமணத்திற்கு யாரையும் அழைக்கவில்லை. திருமணத்தில் பீட்டர் சைடில் இருந்து ஏன் யாரும் வரவில்லை என்றும் கேள்வி கனைகளை தொடுத்துள்ளார் ஹெலன். இதற்கெல்லாம் வனிதாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..