கொரோனா அச்சம்.. ஊரடங்கு அலர்ட்.. திருமண நிகழ்ச்சி பிளானை மாற்றிய பிரபல நடிகர்!
கேரளா: ரஜினியின் பேட்ட படத்தில் நடித்த மணிகண்டன் ஆச்சாரி தனது திருமண நிகழ்ச்சி பிளானை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மாற்றியுள்ளார்.
மலையாள நடிகரான மணிகண்டன் ஆச்சாரிக்கும் அஞ்சலி என்பவருக்கும் வரும் ஏப்ரல் 26ம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது.

தமிழ் திரையுலகம் மற்றும் மலையாள திரையுலகின் பிரபலங்களுக்கு பத்திரிகை வைத்த நிலையில், தற்போது, சிம்பிளாக கூட்டம் இன்றி, குடும்ப உறவினர்களோடு தனது திருமணத்தை நடத்த மணிகண்டன் முடிவு செய்துள்ளார்.

நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 26ம் தேதி தனது திருமணத்தை வைத்துள்ள மணிகண்டன், மற்றவர் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் அச்சம் முழுமையாக நீங்கிய பிறகு, தடபுடலாக திருமண வரவேற்பு வைக்கவும் தான் திட்டமிட்டுள்ளதாக மணிகண்டன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நிவின் பாலியின் 'துறைமுகம்' படத்தில் நடித்து வரும் மணிகண்டன், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகி வரும் மாமனிதன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











