#Petta பற்றி பொடி வைத்து ட்வீட்டிய தயாநிதி: நீங்க என்ன சொல்றீங்க மக்களே?
Recommended Video

சென்னை: ரஜினி படம் குறித்து தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி பொடி வைத்து ட்வீட் போட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. படத்தை கொண்டாட ரஜினி ரசிகர்கள் தற்போதே தயாராகிவிட்டனர்.
பேட்ட படத்தில் ரஜினி மிகவும் இளமையானவர் போன்று தெரிவது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளித்துள்ளது.
தயாநிதி அழகிரி
பேட்ட பாடல்களில் இருக்கும் எனர்ஜி பிடித்துள்ளது. ரசிகர்கள் பற்றி தெரிந்து தலைவர் ரசிகர்களுக்கு ஏற்றபடி பாடல் கொடுத்துள்ளார் அனிருத். இந்த படம் கொண்டாட்டம் தான். ஒரு வழியாக நாம் நீண்ட நீண்ட காலமாக காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் கிடைக்கப் போகிறது என்று ட்வீட் செய்துள்ளார் தயாநிதி அழகிரி.
மனோஜ் மஞ்சு
ரஜினி ரசிகர்களுக்கான படம் வெளியாகி பல காலம் ஆகிறது என்ற தயாநிதி அழகிரியின் கருத்துக்கு தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பேட்ட
உண்மையான ரஜினி படம் பேட்ட என்று பொடி வைத்து ட்வீட்டிய தயாநிதி அழகிரிக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கருத்து
ரஜினியை வைத்து இயக்குனர்கள் தாங்கள் கூற விரும்பும் கருத்தை கூறுகிறார்களே தவிர அவரின் ரசிகர்களுக்கான கொண்டாட்டமான படம் அளிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











