Don't Miss!
- News ஆஹா.. திடீரென குறைந்த தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா? இன்னும் குறையுமா? ஆனந்த் சீனிவாசன் பளிச்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்
Recommended Video
சென்னை: காஞ்சனா 3 பட நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகைப்படக் கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நடித்த காஞ்சனா 3 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் ராகவா லாரன்ஸின் காதலியாக நடித்தவர் ரஷ்யாவை சேர்ந்த ரி ஜாவி அலெக்சாண்ட்ரா.
சென்னையில் தங்கி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அவருக்கு பாலியல் தொல்லை
அஜித்தை விட்டாலும் நயன்தாராவை விடாத சிவா? கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகை
புகைப்படக் கலைஞரும், மாடலுமான ருபேஷ் குமார் என்பவர் ரி ஜாவியை பப் ஒன்றில் சந்தித்துள்ளார். பட வாய்ப்பு வாங்கித் தருகிறேன் போட்டோஷூட்டுக்கு வாங்க என்று ருபேஷ் ரி ஜாவியை அழைத்துள்ளார்.
மிரட்டல்
போட்டோஷூட்டின் போது ருபேஷ் ரி ஜாவியை போஸ் கொடுக்க வைக்கிறேன் என்ற பெயரில் நெருங்கி புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அவர் ரி ஜாவியை படுக்கைக்கு அழைத்துள்ளார். படுக்கைக்கு வராவிட்டால் உங்கள் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
புகார்
ருபேஷின் தொல்லையை தாங்க முடியாத ரி ஜாவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். விசாரணையில் ரி ஜாவி தெரிவித்தது உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ருபேஷை கைது செய்தனர். ருபேஷ் தற்போது புழல் சிறையில் உள்ளார்.
ரஷ்ய நடிகை
தமிழ் திரையுலகை சேர்ந்த உதவி இயக்குநர் கார்த்திக் பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக மலையாள நடிகை சஜிதா மாடத்தில் தெரிவித்தார். இந்நிலையில் ரஷ்ய நடிக்கைக்கும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.