Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நான் கடவுள் படத்தில் 9 மாதம் நடித்தேன்.. சம்பளமே தரல! - மாற்றுத் திறனாளி சாந்தி குற்றச்சாட்டு
திருச்செந்தூர்: நான் கடவுள் படத்திற்காக ஒன்பது மாதம் நடித்தேன் எனக்கு இன்னும் சம்பளம் கிடைக்கவில்லை என மாற்றுத் திறனாளி நடிகை சாந்தி கூறியுள்ளார்.
நேற்று முதல் வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ வலம் வருகிறது. அந்த வீடியோவில் இருப்பவர் பெயர் சாந்தி. நான் கடவுள் படத்தில் நடித்த மாற்றுத் திறனாளி. இப்போது திருச்செந்தூர் கோயில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்.
பாலா இயக்கி தேசிய விருது வென்ற நான் கடவுள் படத்துக்காக 9 மாதங்கள் இந்தப் பெண் வேலை செய்திருக்கிறார்.
ஆனால் இன்று வரை அதற்கான சம்பளம் கிடைக்கவில்லையாம். படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இப்போது சம்பளம் தராவிட்டாலும் பரவாயில்லை, எனக்கு ஏதாவது நடிக்க வாய்ப்புகள் அதை வைத்து சமாளித்துக் கொள்வேன் என்கிறார் சாந்தி.
சரியாகப் பேசக்கூட முடியாத இந்தப் பெண்ணை, கதையின் இயல்புத் தன்மைக்காக 9 மாதங்கள் பயன்படுத்திக் கொண்டவர்கள், சம்பளம் மற்றும் சரியான வசதிகள் செய்து கொடுத்திருக்க வேண்டாம். விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய உருக்கமான அந்தப் படத்துக்குப் பின்னால் இப்படி ஒரு கோரக் கதையா?