Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மார்ச் 4ஆம் தேதி முதல் விஜய் ஆன்டனியின் 'பிச்சைக்காரன்'!
விஜய் ஆன்டனியின் அடுத்த படமான பிச்சைக்காரன் வரும் மார்ச் 4-ம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது.
விஜய் ஆண்டனி, சத்னா டைட்டஸ் இணையாக நடிக்க, சசி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பிச்சைக்காரன்'.
இந்தப் படத்தை கேஆர் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்காலார்க் நிறுவனம் வெளியிடுகிறது.
படம் குறித்து வெளியீட்டாளர் கேஆர் பிலிம்ஸ் சரவணன் கூறுகையில், "தமிழ் திரை உலகத்துக்கு இது நல்ல வேளை என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல தரமான கதை அம்சம் உள்ளப் படங்கள் வெளி வருவதும், வெற்றி பெறுவதும் எங்களைப் போன்ற விநியோகஸ்தர்களுக்கு ஊக்கம் தருகிறது. அந்த ஊக்கமே 'பிச்சைக்காரன்' போன்ற தரமான கதை உள்ள படமும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது.
ரசிகர்கள் இடையேயும் திரை அரங்கு உரிமையாளர்கள் இடையேயும் இன்று விஜய் ஆண்டனிக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பு அவரவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி எனலாம். இயக்குநர் சசிக்கு ரசிகர்கள் இடையே இருக்கும் கண்ணியமான வரவேற்பு மிகப் பெரியது. 'பிச்சைக்காரன்' அதை இருமடங்காக்கும் என்பதில் எங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு," என்கிறார்.