Don't Miss!
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிச்சைக்காரனுக்கு யு சான்று... சாதிப்பாரா சசி?
சொல்லாமலே படம் மூலம் இயக்குநரான சசிக்கு, அந்தப் படத்துக்குப் பிறகு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அமைந்த வாய்ப்புகளை அவரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவுமில்லை.
டிஷ்யூம், பூ, 555 போன்றவை அப்படி வீணாய் போன வாய்ப்புகளே.
இப்போது அவருக்கு இன்னுமொரு நல்ல வாய்ப்பு, விஜய் ஆன்டனி மூலம் வந்திருக்கிறது. அதுதான் பிச்சைக்காரன்.
சமீபமாக திரைக்கு வரவிருக்கும் படங்களில் ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் அது.
யு சான்று பெற்றுள்ள 'பிச்சைக்காரன்' படத்தின் விநியோக உரிமையை கே ஆர் பிலிம்ஸ் சரவணன் வாங்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், "இந்தப் படத்துக்கு 'U' சான்றிதழ் கிடைத்து இருப்பது எங்களுக்கு மிக மிக சந்தோசம். இந்தப் படத்தை ரசிகர்கள் தங்களது குடும்பத்தாருடன் வந்து ரசிக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். அடுத்த மாதம் வெளி வர உள்ள 'பிச்சைக்காரன்' திரை அரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் என்று அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை," என்கிறார்.
இந்தப் படம் தனக்கு பெரும் திருப்பு முனையாக அமையும் என சசியும் நம்புகிறார்.