Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிச்சைக்காரனுக்கு யு சான்று... சாதிப்பாரா சசி?
சொல்லாமலே படம் மூலம் இயக்குநரான சசிக்கு, அந்தப் படத்துக்குப் பிறகு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அமைந்த வாய்ப்புகளை அவரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவுமில்லை.
டிஷ்யூம், பூ, 555 போன்றவை அப்படி வீணாய் போன வாய்ப்புகளே.
இப்போது அவருக்கு இன்னுமொரு நல்ல வாய்ப்பு, விஜய் ஆன்டனி மூலம் வந்திருக்கிறது. அதுதான் பிச்சைக்காரன்.
சமீபமாக திரைக்கு வரவிருக்கும் படங்களில் ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் அது.
யு சான்று பெற்றுள்ள 'பிச்சைக்காரன்' படத்தின் விநியோக உரிமையை கே ஆர் பிலிம்ஸ் சரவணன் வாங்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், "இந்தப் படத்துக்கு 'U' சான்றிதழ் கிடைத்து இருப்பது எங்களுக்கு மிக மிக சந்தோசம். இந்தப் படத்தை ரசிகர்கள் தங்களது குடும்பத்தாருடன் வந்து ரசிக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். அடுத்த மாதம் வெளி வர உள்ள 'பிச்சைக்காரன்' திரை அரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் என்று அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை," என்கிறார்.
இந்தப் படம் தனக்கு பெரும் திருப்பு முனையாக அமையும் என சசியும் நம்புகிறார்.