Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிச்சைக்காரனுக்கு யு சான்று... சாதிப்பாரா சசி?
சொல்லாமலே படம் மூலம் இயக்குநரான சசிக்கு, அந்தப் படத்துக்குப் பிறகு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அமைந்த வாய்ப்புகளை அவரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவுமில்லை.
டிஷ்யூம், பூ, 555 போன்றவை அப்படி வீணாய் போன வாய்ப்புகளே.
இப்போது அவருக்கு இன்னுமொரு நல்ல வாய்ப்பு, விஜய் ஆன்டனி மூலம் வந்திருக்கிறது. அதுதான் பிச்சைக்காரன்.
சமீபமாக திரைக்கு வரவிருக்கும் படங்களில் ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் அது.
யு சான்று பெற்றுள்ள 'பிச்சைக்காரன்' படத்தின் விநியோக உரிமையை கே ஆர் பிலிம்ஸ் சரவணன் வாங்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், "இந்தப் படத்துக்கு 'U' சான்றிதழ் கிடைத்து இருப்பது எங்களுக்கு மிக மிக சந்தோசம். இந்தப் படத்தை ரசிகர்கள் தங்களது குடும்பத்தாருடன் வந்து ரசிக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். அடுத்த மாதம் வெளி வர உள்ள 'பிச்சைக்காரன்' திரை அரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் என்று அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை," என்கிறார்.
இந்தப் படம் தனக்கு பெரும் திருப்பு முனையாக அமையும் என சசியும் நம்புகிறார்.