சென்னையில் நடந்த சிசிஎல் பார்ட்டிக்கு வந்த விஜய், நயன்தாரா
சென்னை: சென்னையில் நடந்த சிசிஎல் பார்ட்டியில் விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிசிஎல் 3வது சீசன் சென்னை அணிக்கு ராசியில்லாததாகிவிட்டது. இந்த சீசனில் சென்னை அணி வெளியேறிவிட்டது. இந்நிலையில் அண்மையில் சென்னையில் சென்னை ரைனோஸ் அணிக்கு ஒரு பார்ட்டி கொடுக்கப்பட்டது. அந்த பார்ட்டிக்கு இளைய தளபதி விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வந்திருந்தார்.
அடுத்து அழகுச் சிலை நயன்தாரா வந்திருந்தார். பார்ட்டியில் ஷாம், விஷால், பரத், சோனியா அகர்வால், கன்னட நடிகரும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி கேப்டனுமான சுதீப், கர்நாடகா அணியின் உரிமையாளர் அசோக் கெனி, விக்ராந்த், ஜீவா, விஷ்ணு, ஆர்யா, ஜே ரமேஷ், ஷிவா, சாந்தனு, ரமணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாங்க பார்ட்டிக்கு வந்தவங்களை பார்த்துவிட்டு வருவோம்...

சிரித்துப் பேசும் விஜய்
விஜய் மற்றும் நயன்தாரா வந்தவுடன் தான் பார்ட்டி களை கெட்டியது என்று கூறப்படுகிறது.

பார்ட்டியில் விஜய்
பார்ட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியும், சென்னை அணியும் நட்புடன் பழகியுள்ளனர்.

அடக்கமாக போஸ் கொடுக்கும் விஜய்
கர்நாடக அணி கேப்டன் சுதீப் மற்றும் சென்னை அணி கேப்டன் விஷாலும் நட்பு பாராட்டியுள்ளனர்.

போஸ் கொடுத்து கொடுத்து களைத்த விஜய்
இந்த சீசனில் சென்னை ரைனோஸ் அணி ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கூட்டத்தில் தொலைந்தது போன்று விழிக்கும் ஆர்யா
சென்னை அணி தான் விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஏனுங்க அம்மணி சோகமாக இருக்கீங்க?
சென்னை ரைனோஸ் அணி போஜ்புரி தபாங்ஸ் மற்றும் மும்பை ஹீரோஸ் அணிகளிடம் தோற்றது.

சோனியா அகர்வால்
சென்னை அணி பெங்காள் டைகர்ஸ் அணியை மட்டுமே வீழ்த்தியது.

தூக்கத்தில் இருக்கும் சுதீப்
கர்நாடக அணிக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











