Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிக்கு படத்தை ரசித்துப் பார்த்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
மும்பை: கடந்த மாதம் அமிதாப், தீபிகா படுகோனே மற்றும் இர்பான் நடிப்பில் வெளிவந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற பிக்கு படம், இப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பாராட்டையும் பெற்றுள்ளது.
கடந்த மாதம் இந்தியில் வெளிவந்த, குடும்ப பின்னணியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த பிக்கு படம் இதுவரை சுமார் 100 கோடி ரூபாயை வசூல் செய்து இந்த ஆண்டின் முதல் 100 கோடி வசூல் செய்த படம் என்று பெயரைப் பெற்றுள்ளது.
படத்தின் வெற்றியால் ஈர்க்கப் பட்ட தெலுங்குலகம் இந்தப் படத்தை ரீமேக் செய்ய முன்வந்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் அதில் நடித்த அமிதாப் மற்றும் தீபிகா உள்ளிட்டோர் பரவலான பாராட்டுகளைப் பெற்ற நிலையில், தற்போது இந்தப்படத்தை நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடிகர் அமிதாப் பச்சன் திரையிட்டார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் நடிகர் அமிதாப் மற்றும் படத்தின் இயக்குநர் சுஜித் சிர்கார் ஆகியோர் இந்தப் படத்தை பார்த்தனர்.
படத்தைப் பார்த்த பிரணாப் மிகவும் நன்றாக இருந்தது என்று ரசித்துப் பாராட்டியதாக அமிதாப் தனது வலைத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இரவு உணவின் போதும் பிரணாப் அவர்கள் உணவு மேஜையிலும் இதனைப் பற்றியே பேசினார்.
குறிப்பாக எனது பெங்காலி உச்சரிப்பைப் பற்றி நன்றாக இருந்ததாக பாராட்டினார், இது எனது வாழ்கையில் கிடைத்த மிகப் பெரிய கவுரமாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை தீபிகா மற்றும் நடிகர் இர்பான்கான் ஆகியோர் படப்பிடிப்பு தொடர்பாக வெளிநாடுகளில் இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.