கீழப்பாவூரில் வேட்டை-ராவணன், சிங்கம், சுறா திருட்டு விசிடிக்கள் பறிமுதல்
கீழப்பாவூரில் புதுப்பட சிடிக்கள் வைத்திருந்த கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
கீழப்பாவூர் சாமிநாடார் தெருவை சேர்ந்தவர் சுடலைஒளிவு மகன் சுப்புராஜ். இவர் அதே ஊர் காமராஜர் சாலையில் கேசட் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புதுப்பட சிடிக்கள் விற்கப்படுவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று கடையை சோதனை போட்டனர்.
அப்போது இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், சுறா, பையா, ராவணன் போன்ற புதுப்பட சிடிக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்தனர். சுப்புராஜூம் கைது செய்யப்பட்டார்.
Comments


Click it and Unblock the Notifications