Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
என்னாச்சு விஷால்... அவ்ளோதானா திருட்டு டிவிடி போராட்டம்?
குடிகாரன் பேச்சு...விடிஞ்சா போச்சுனு சொல்வாங்க... அந்த வரிசையில சினிமாகாரங்க பேச்சையும் சேர்த்துக்கலாம். மற்றவர்கள் விஷயத்தில் ஓகே... ஆனால் தங்கள் சொந்த பிரச்னைகளையே பேசுகிறார்கள். பின்னர் மறந்துவிடுவார்கள். அதில் முக்கியமானது திருட்டு டிவிடி விவகாரம்.
படம் ரிலீஸான சில நாட்களில், படத்தின் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கமிஷனர் அலுவலகத்தில் திருட்டு டிவிடிக்கு எதிராக புகார் கொடுப்பார்கள். இதனை சம்பிரதாயமாகவே வைத்துள்ளார்கள். அடுத்த சில நாட்களில் படத்தோடு சேர்ந்தே திருட்டு டிவிடி புகாரும் காணாமல்
போய்விடும்.
ஆக, இவர்களுக்கு நிரந்தர தீர்வு தேவையில்லை. திருட்டு டிவிடிக்கு எதிராக மருது விழாவில் அவ்வளவு ஆவேசமாக குரல் கொடுத்த விஷால் கூட அதன் பின்னர் இரண்டு இடங்களில் மனிதன் திருட்டு டிவிடியை பிடித்ததோடு சரி... பின்னர் ஆளைக் காணவில்லை.
ஒரு விஷயத்தைக் கையிலெடுத்துவிட்டால், அதற்கு தீர்வு காணும் வரை ஓயக் கூடாது. நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்ற தீயா வேலப் பாத்த மாதிரி, திருட்டு வீடியோவுக்கு எதிராகவும் வேலப் பார்க்க வேண்டாமா?